முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிச்சைக்காரரிடமிருந்து ரூ.2 கோடி பறிமுதல்

வியாழக்கிழமை, 24 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

ரியாத், ஜூலை.25 - சவூதி அரேபியாவில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு நபரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் இருப்பது தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக சவூதியில் தங்கியுள்ளனர். அந்த பிச்சைக்காரரின் வீட்டுக்குச் சென்ற போலீசார் அங்கிருந்து 12 லட்சம் ரியால் ரொக்கத்தைக் கைப்பற்றினார்.

அந்தப் பிச்சைக்காரரின் குடும்பம் சவூதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசதியாக வாழ்ந்து வருவதும், பல்வேறு நகரங்களுக்கும் அவர் சொந்தக்காரில் சென்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. அவரது நடவடிக்கைகள் குறித்து போலிசார் விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்