முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைத் திருமணத்தைக் கட்டுப்படுத்த புதிய திட்டம்

வியாழக்கிழமை, 24 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூலை.25 - இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளில் குழந்தைத் திருமணங்களைத்தடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக 4.8 மில்லியன் டாலரை அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்தியா தவிர நேபாளம், வங்கதேசம், எத்தியோப்பியா, தான்ஸானியா மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து வாஷிங்டனில் சர்வதேச அபிவிருதிக்கான நிர்வாகி ராஜ் ஷா கூறுகையில், குழந்தைத் திருமணத்திற்கு எதிரான என்பது வருமைக்கு எதிரான போராட்டம் ஆகும்.

இரண்டு தலைமுறைகளாக நிலவும் வறுமையை முடிவுக்கு கொண்டு வர அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். அதைச் செயல்படுத்தும் விதமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டுள்ள இந் நிதியானது பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்காக, 1994-ஆம் ஆண்டு முதல் பெண் குழன்தைகளுக்கு நிபந்தனைக்கு உள்பட்ட பணச் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்படி, 18 வயதுக்கு மேல் மட்டுமே பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும், இல்லையென்றால் அரசால் வழங்கப்படும் நிதி திரும்பப் பெறப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்