எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை. 26: சட்டசபையில் தி.மு.க.வினரை பங்கேற்க அனுமதிக்கக்கோரிய மனுவை சபாநாயகர் தனபால் நிராகரித்து விட்டார். சட்டசபையில் நேற்று சந்திரகுமார் (தே.மு.தி.க.), சவுந்தரராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ), ஆறுமுகம் (இந்திய கம்யூ), ரங்கராஜன் (காங்), ஜவஹீருல்லா (மனித நேய மக்கள் கட்சி), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஆகியோர் எழுந்து ஒரு கோரிக்கை விடுத்தனர்.
தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சபை நடவடிக்கையில் பங்கேற்க கூடாது என்ற நடவடிக்கைய சபாநாயகர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தண்டனையை ரத்து செய்து சபை நடவடிக்கையில் மீண்டும் பங்கேற்க வாய்ப்பு வழங்க வேண்டும் அவர்கள் கோரினர்.
அப்போது அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வம் எழுந்து ,கூறியதாவது:– ‘‘தி.மு.க.வினர் மீது எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டது என்பது குறித்து விரிவாக விளக்கம் அளித்தார்.
சபாநாயகரை கன்னிய குறைவான வார்த்தையை அவர்கள் பேசியது மட்டுமின்றி சபைக்கு இடையூறு செய்யும் நோக்கில் அவர்கள் தொடர்ந்து நடந்து வந்ததாகவும் கூறினார்.
பலமுறை சபாநாயகர் எச்சரித்தும் அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. அரசியல் விளம்பரத்துக்காக அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
முதல்–அமைச்சர் எண்ணப்படிதான் தாங்கள் வெளியேற்றப்பட்டதாக அவர்கள் கூறியது உள்ள படியே கண்டிக்கத்தக்க செயல். சபாநாயகர் எவ்வளவோ பொறுமை காத்தும் பலமுறை எச்சரித்தும் அவர்கள் சபையை கன்னியமாக நடத்த ஒத்துழைப்பு கொடுக்க வில்லை. அன்றைய தினம் உறுப்பினர் துரைமுருகன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் அவர்களது உறுப்பினர்களை உட்காருங்கள் என்று கூறியும் உட்காரவில்லை.
உட்காருங்கள் வாய்ப்பு தருகிறோம். நாங்கள் பேச வாய்ப்பு தருகிறோம் என்று கூறியும் அவர்கள் கேட்கவில்லை. மலிவான அரசியல் லாபம் தேடுவதற்காக அவர்கள் நடந்து கொள்வதற்கு நீங்கள் துணை போவது (எதிர்கட்சி) எந்த வகையில் நியாயம்.
கடந்த தி.மு.க. ஆட்சியின் போது (2006–2007) எதிர்கட்சி தலைவராக இருந்த அம்மா சபை விவாதத்தில் பங்கேற்று பேசும் போது அனைத்து அமைச்சர்களும் எழுந்து 62 தடவை குறுக்கீடு செய்தனர். அம்மாவை பேச விடாமல் தடுத்தனர். ஆனாலும் தனது ஆணித்தரமான வாதத்தை அம்மா பேசிவிட்டு சென்றார். அப்போது நிதி அமைச்சராக இருந்த பேராசிரியர் அன்பழகன் கூறும் போது, ‘‘நிற்க வேண்டியவர் ஓடி விட்டார். ஓடிப்போனால் சொல்லக்கூடாதா?’’ என்றார்.
இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அப்போது, அன்பழகன் சொன்ன வார்த்தை என்னவென்றால் நான் சொல்லியதில் தப்பு இல்லையே என்றார். எனவே தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சபையில் கன்னியக் குறைவாக நடந்ததால்தான் 4–வது முறையாக வெளியேற்றும் சூழ்நிலையை உருவாக்கினார்கள். இவர்களுக்காக எதிர்க்கட்சியினர் பரிந்துரை செய்வது வருத்தமான செயல்.
இவ்வாறு அவர் கூறினார்.
சபாநாயகர் தனபால்:– கடந்த 22.7.2014 அன்று தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் நடந்த விதத்தை நீங்கள் எல்லோரும் எதிரே பார்த்து கொண்டு இருந்தீர்கள். இவர்கள் தினமும் திட்டமிட்டு குழப்பம் விளைவித்து வந்தனர். நானும் பொறுமை காத்து வந்தேன். அவர்கள் தினமும் அவைக்கு வந்து தங்கள் தொகுதி மக்களுக்கு தேவையான கோரிக்கையை வைக்காவிட்டாலும் மாண்புமிகு அம்மாவை பொருத்தமட்டில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளையும் தனது தொகுதிகளாக கருதி தேவையானவற்றை செய்து தரும் நீதி தேவதையாக விளங்கி கொண்டு இருக்கிறார்.
அம்மாவின் எண்ணத்துக்கு ஊறு ஏற்படக்கூடாது என்ற வகையில் அன்றைய தினம் எவ்வளவு நேரம் பொறுமை காக்க முடியுமோ அவ்வளவு நேரம் பொறுமை காத்து அவர்களை பலமுறை எச்சரிக்கை செய்தும் குந்தகம் விளைவித்ததால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பலமுறை சொன்னோம். ஆனாலும் அவை மரபுக்கு கட்டுப்படாமல் பேரவை தலைவரின் வார்த்தைக்கு மதிப்பளிக்காதது ஏன்? தி.மு.க. சட்டமன்ற குழு தலைவர், துணைத் தலைவர் அமரச் சொல்லியும் அதற்கும் தி.மு.க. உறுப்பினர்கள் கட்டுப்படாமல் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துக்கு செயல்பட்டதால் தான் அவர்களை வெளியேற்ற வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டேன்.
அவையில் இருந்து 2–வது முறை வெளியேற்றப்பட்ட உடனேயே இந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டு இருக்கலாம். ஆனாலும் அவர்கள் திருந்துவதற்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கலாம் என்ற எண்ணத்தோடு அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள தொடர்ந்து அனுமதித்தேன்.
அதன் பிறகும் சபையில் 2 முறை வெளியேற்றப்பட்டு விட்டனர். எனது இருக்கைக்கு அருகில் வந்து கை நீட்டி குரல் எழுப்புவது என்பதை ஏற்றுக் கொள்ள இயலாத நிலையில் என்னையும் மதிக்காமல் அவர்களுடைய கட்சி தலைமைக்கும் கட்டுப்படாத காரணத்தால் நான் தி.மு.க. உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்.
இவ்வாறு சபாநாயகர் தனபால் கூறினார்.
தி.மு.க. உறுப்பினர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்ய வேண்டும் என்று மீண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்த தொடங்கினார்கள். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி மறுத்தார்.
இதை தொடர்ந்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹீருல்லா ஆகியோர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.