எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை 26: தமிழகத்தில் ரூ.2,325 கோடி செலவில் சாலைகள், சுரங்கப்பாதைகள் மற்றும் பாலங்கள் அமைக்கப்படும், அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 300 கோடி ரூபாய் மதிப்பில் 100 ஆற்றுப் பாலங்கள் கட்டப்படும், என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். .
சட்டசபையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–
தொழில் வளர்ச்சி, வேளாண் வளர்ச்சி, குறைந்த நேரத்தில் விரைவான பயணம், எரிபொருள் சிக்கனம், பாதுகாப்பான பயணம் ஆகியவற்றின் அடித்தளங்களாக விளங்குபவை சாலைகள் மற்றும் பாலங்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, சாலை உட்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு முழுவதும் மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, 2,325 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பிலான சாலைகள், பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்கும் திட்டங்களை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
1. புதிதாக விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலைத் துறையின் 250 கிலோ மீட்டர் சாலைகளில் விளிம்பு வரை அகலப்படுத்தும் பணிகள், வடிகால் வசதியுடன் கூடிய நடைபாதைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு மொத்தம் 1,033 கோடி ரூபாய் செலவு ஏற்படும். முதற்கட்டமாக, இந்த ஆண்டு 250 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும்.
2. சென்னை பெருநகரில் பெருகி வரும் போக்குவரத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு, 185 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மேடவாக்கம் மற்றும் கீழ்க்கட்டளையில் இரண்டு பல்வழிச்சாலை மேம்பாலங்களும்; 50 கோடி ரூபாய் மதிப்பில் தெற்கு உள் வட்ட சாலையில் வாகன சுரங்கப் பாதையும் ஜப்பான் பன்னாட்டு ஒருங்கிணைப்பு முகமையின் நிதியுதவியுடன் கட்டப்படும்.
3. 58 கோடி ரூபாய் மதிப்பில், பருத்திப்பட்டு, ராமாவரம் மற்றும் நொளம்பூர் அருகே மூன்று உயர்மட்ட பாலங்களும்; 12 கோடி ரூபாய் மதிப்பில் தாம்பரம் ரயில்வே நிலையத்திற்கு அருகில் நகரும் படிகட்டுகளுடன் கூடிய ஒரு நடை மேம்பாலமும் அமைக்கப்படும்.
4. ஒரகடம் தொழிற்பூங்கா பகுதியில் சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சிங்கப்பெருமாள் கோயில் - திருப்பெரும்புதுhர் மாநில நெடுஞ்சாலையில், ஒரகடம் முதல் திருப்பெரும்புதூர் வரை ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சிங்கபெருமாள் கோயில் முதல் ஒரகடம் வரை ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் 120 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.
5. மதுரை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை பெருமளவு குறைக்கும் வகையில், மீனாட்சி மிஷன் மருத்துவமனை முதல் கப்பலூர் வரை
27 கிலோ மீட்டர் நீள மதுரை வட்டச் சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணி 200 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.
6. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சேலம் மாநகர் ஐந்து சாலைகள் சந்திப்பு அருகே உயர்மட்ட பாலம் கட்டப்படும். இப்பணிக்காக நடப்பாண்டில் 275 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
7. பின்தங்கிய மாவட்டங்களான ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, ராமநாதபுரம் மாவட்டத்தில் 35 கிலோ மீட்டர் நீள மாநில நெடுஞ்சாலையும், விருதுநகர் மாவட்டத்தில் 15.6 கிலோ மீட்டர் நீள மாநில நெடுஞ்சாலையும் 100 கோடி ரூபாய் செலவில் மேம்பாடு செய்யப்படும்.
8. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் நகரை சுற்றியுள்ள சாலைகளில் மழைக்காலங்களில், நீர் தேங்குவதை தவிர்க்கும் பொருட்டு 33 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலைகள் உயர்த்தி அமைக்கப்படும்.
9. நாமக்கல் - திருச்செங்கோடு சாலை 140 கோடி ரூபாய் செலவில் நான்கு வழித் தடமாக மாற்றி அமைக்கப்படும்.
10. பாதசாரிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய, அரக்கோணம் சுரங்கப்பாதை அருகே 66 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படும்.
11. கடலுhர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி, கொள்ளிடம் ஆற்றின் இடது புற கரை சாலை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்திரம்பூர் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வாணியாற்றின் குறுக்கே என 4 உயர்மட்ட பாலங்கள் 60 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.
12. இதே போல், சேலம் நகரத்தில் திருவாக் கவுண்டனூர் சந்திப்பில் ஒரு பல் வழிச் சாலை மேம்பாலம் 50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.
13. மேலும், கோயம்புத்துhர் நகரத்தில் நஞ்சுண்டாபுரம் சந்திப்பு மற்றும் ரயில் நிலையம் சந்திப்பில் இரண்டு நகரும் படிக்கட்டுடன் கூடிய நடை மேம்பாலங்களும்; கரூர் நகரத்தில் பேருந்து நிலையம் அருகே ஒரு நடை மேம்பாலமும் 24 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
14. நகரங்களில் விபத்தை தடுக்கும் வண்ணம், அனைத்து சாலை பகுதிகளிலும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுதல், வடிவியல் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுதல், குறுகிய பாலங்களை அகலப்படுத்துதல், திறந்த கிணறுகளில் விபத்து தடுப்பான்கள், மைய தடுப்பான்கள் அமைத்தல், சாலை சமிக்ஞைகள் அமைத்தல் போன்றவற்றிற்காக 1,130 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் கண்டறியப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 400 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடப்பாண்டு மேற்கொள்ளப்படும்.
15. நபார்டு வங்கி கடனுதவியுடன், அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 300 கோடி ரூபாய் மதிப்பில் 100 ஆற்றுப் பாலங்கள் கட்டப்படும்.
16. இவை தவிர, சாலைகளின் மேலாண்மை மற்றும் பராமரிப்பு பணிகளை திறன்பட செயல்படுத்தும் வகையில், ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகள் மற்றும்
மாவட்ட முக்கிய சாலைகளை 5 ஆண்டுகளுக்கு மேம்படுத்தி, ஒருங்கிணைத்து பராமரிக்க 1,020 கோடி ரூபாய் மதிப்பில் பராமரிப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.
எனது தலைமையிலான அரசின் நடவடிக்கைகள், அனைத்துத் தரப்பு மக்களின் போக்குவரத்து வசதியை மேலும் மேம்படுத்துவதுடன், நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் செல்லவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.