முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஜக- சிவசேனா மீது ராகுல் கடும் தாக்கு

சனிக்கிழமை, 26 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.27 - நோன்பு இருந்த முஸ்லிம் ஒருவரின் வாயில் உணவைத் திணித்த விவகாரம் தொடர்பாக பாஜக, சிவசேனாவை ராகுல் காந்தி கடுமையாக தாக்கியுள்ளார்.

நோன்பு இருந்த ஒருவரின் வாயில் உணவை திணித்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மேலும் கூறுகையில், இதுதான் பாஜக மற்றும் சிவசேனாவின் கொள்கை. தாங்கள் நினைத்தபடி நடக்க மக்களை கொடுமைப்படுத்துகிறார்கள். இது நாட்டை நாசமாக்கும் செயல். இவர்களுக்கு எதிராகத்தான் நாங்கள் அனுதினமும் போராடி வருகிறோம். காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்