முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க-வுக்கு களங்கம் விளைவிக்க காங்.,- தே.காங்., சதி

சனிக்கிழமை, 26 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.27 - மகாராஷ்டிரா சதான் சம்பவத்தை அரசியலாக்கி, பாஜக, சிவ சேனை கட்சிகளுக்கு களங்கம் விளைவிக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சதி செய்வதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டியுள்ளார்.

நோன்பு இருந்தவர் வாயில் சிவ சேனை எம்.பி. வலுக்கட்டாயமாக உணவை திணித்ததாக எழுந்த புகார் கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது.

இச்சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் நிதீன்கட்காரி கூறியிருப்பதாவது:-மகாராஷ்டிரா சதான் சம்பவத்தை அரசியலாக்கி, பாஜக, சிவ சேனை கட்சிகளுக்கு களங்கம் விளைவிக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சதி செய்கின்றன.

மகாராஷ்டிரா சதான் சம்பவம், மாநில அரசு விருந்தினர் மாளிகையில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதை எதிர்க்கும் வகையில், சிவ சேனை எம்.பி. மேற்கொண்ட நடவடிக்கையாகும் இதில் மதச்சாயம் பூசி அரசியல் ஆதாயம் தேட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முயற்சி செய்கின்றன.

இவ்விரு கட்சிகளும் எப்போதுமே மதவாதம், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் வாக்கு வங்கி அரசியல் நடத்த முற்படுகின்றன.

காங்கிரஸ் ஆட்சியின் காரணமாகத்தான், நாட்டில் பட்டினிச் சாவுகள், வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகள் அதிகரித்தன" இவ்வாறு நிதீன்கட்காரி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்