முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஸ்லீம்களுக்கு அரணாக இருப்பது காங்கிஸ்: வாசன்

சனிக்கிழமை, 26 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.27 – தமிழக காங்கிரஸ் சார்பில் இப்தார் விருந்து பூந்தமல்லி ரோட்டில் உள்ள அபுபேலஸ் ஹோட்டலில் நடந்தது.

இதில் கலந்து கொண்டு முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே. வாசன் பேசியதாவது:–

இஸ்லாமியர்களுக்கு தனி வாரியம், 15 அம்ச திட்டம், உருது டி.வி. ஆகியவற்றை தந்தது காங்கிரஸ் அரசு என்றும், இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும். பல கட்சிகள் இப்தார் நிகழ்ச்சி நடத்துகின்றன. ஆனால் 100 சதவீதம் இந்த நிகழ்ச்சியை நடத்தும் உரிமை காங்கிரசுக்குத்தான் உண்டு.

நீங்கள் எல்லாம் காங்கிரசுக்கு வாக்களிக்காமல் மாநில கட்சிகளுக்கு வாக்களித்ததால் காங்கிரஸ் கட்சி பின் தங்கிவிட்டது. இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, இஸ்லாமியர்களுக்கும் பின்னடைவு தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஞானதேசிகன் பேசும் போது, ‘‘பசுவின் நிறம் பலவாக இருந்தாலும் பாலின் நிறம் ஒன்றுதான். அதே போல் நதிகள் பல இருந்தாலும் அவை சேரும் இடம் கடல்தான். மரங்கள் பல இருந்தாலும் அவை போதிக்கும் தத்துவம் ஒன்றுதான். அதே போல் தான் வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசம் நம் தேசம்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்