எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை 29 - பொறியியல் கலந்தாய்வு முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் இதுவரை 77,441 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. ஒரு லட்சத்து 26 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.
நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பது கல்லூரி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 2014-15 கல்வியாண்டில் மொத்தமுள்ள 534 பொறியியல் கல்லூரிகளில் 2,87,646 இடங்கள் உள்ளன. இவற்றில் அரசு ஒதுக்கீட்டிலான இடங்கள் 1,81,941 ஆகும். சில சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை நடைபெறுமோ என்ற அச்சத்தில் 28,712 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையும் கலந்தாய்வுக்கு ஒப்படைத்தன.
இதன் காரணமாக 2014-15 கல்வியாண்டில் ஒற்றை சாளர கலந்தாய்வில் 2,10,653 இடங்கள் இடம் பெற்றன. இதில் வெளிநாடுவாழ் இந்தியர்கள், தொழில் நிறுவன ஒதுக்கீடு என பல்வேறு ஒதுக்கீடுகள் போக ஜூலை 7ம் தேதி தொடங்கிய பொதுப்பிரிவு கலந்தாய்வில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 79 இடங்கள் இருந்தன. ஆகஸ்ட் 4ம் தேதி வரை பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வு முடிய இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் நேற்று முன்தினம் வரை கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட 1,12,732 பேரில் 77,411 இடங்களை தேர்வு செய்து கல்லூரி சேர்க்கை கடிதத்தை பெற்று சென்றனர். 35,010 பேர் கலந்தாய்வில் பங்கேற்பதை தவிர்த்து விட்டனர். 311 பேர் கலந்தாய்வில் பங்கேற்ற போதும் இடங்களை தேர்வு செய்வதை தவிர்த்து விட்டனர்.
பொறியியல் மாணவர் சேர்க்கையை பொறுத்தவரை இப்போதைய பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2013-14ம் ஆண்டில் கலந்தாய்வு முடிய ஒரு வாரம் இருந்த போது ஒரு லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பொறியியல் இடங்களை தேர்வு செய்து கல்லூரி சேர்க்கை கடிதங்களை பெற்று சென்றிருந்தனர். அதுவரை மொத்தம் அழைக்கப்பட்டிருந்த 1,45,500 பேரிஹ் 40,500 பேர் கலந்தாய்வில் பங்கேற்பதை தவிர்த்திருந்தனர். அது மட்டுமின்றி, 100 கல்லூரிகளில் 90 சதவீத இடங்கள் நிரம்பியிருந்தன. ஆனால் இம்முறை அண்ணா பல்கலை கழக துறைகள், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், ஒரு சில பிரபல தனியார் பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே 90 சதவீத இடங்கள் நிரம்பி உள்ளன. மற்ற கல்லூரிகளில் பெரும்பாலானவற்றில் மிக குறைவான மாணவர் சேர்க்கையே நடந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் சேர்க்கை நிகழ்ந்துள்ளன.
அண்ணா பல்கலை கழக கலந்தாய்வு காலியிட விவரத்தின் அடிப்படையில் சென்னை மாவட்டத்தை பொருத்தவரை மொத்தமுள்ள 7 கல்லூரிகளில் ஒரு கல்லூரியில் மிக குறைவான மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 20 கல்லூரிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 கல்லூரிகளிலும், கோவையில் 35 கல்லூரிகளிலும், ஈரோட்டில் 10 கல்லூரிகளிலும், சேலத்தில் 13 கல்லூரிகளிலும், மதுரையில் 10 கல்லூரிகளிலும் மிக குறைவான மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இந்த கல்லூரிகளில் பெரும்பாலும் கணிணி அறிவியல், பி.இ. தகவல் தொழில்நுட்பம் இசிஇ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறாமல் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அரசு ஒதுக்கீட்டின் கீழ் மொத்தமுள்ள 2 லட்சத்து 4 ஆயிரத்து 79 இடங்களில் இப்போது ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 668 இடங்கள் காலியாக உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.