முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முறையற்ற சோதனை: டிக்கெட் பரிசோதகர்கள் நீக்கம்

திங்கட்கிழமை, 28 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஜூலை 29 - மும்பையில் 2ம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்வதற்கு பயண சீட்டு வாங்கிய 65 வயது பெண் ஒருவர் தவறுதலாக முதல் வகுப்பு பெட்டியில் ஏறியதையடுத்து அவரை ஆடைகளை களைய செய்து சோதனை நடத்தியதாக 2 பெண் பயண சீட்டு பரிசோதகர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மும்பை அந்தேரி ரயில் நிலையத்தில் கடந்த 25ம் தேதி புறநகர் ரயிலில் 2ம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்வதற்கு பயண சீட்டு வாங்கியிருந்த 65 வயது பெண் ஒருவர் தவறுதலாக முதல் வகுப்பு பெட்டியில் ஏறி விட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த பயண சீட்டு பெண் பரிசோதகர்கள் 2 பேர் அவரை மிர்ரா சாலை நிலையத்தில் இறக்கி நிலைய அலுவலர் அறைக்கு அழைத்து சென்று ஆடைகளை களைய செய்து சோதனையிட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது என்று மேற்கு ரயில்வே மண்டல மேலாளர் சைலேந்திர குமார் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்