முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த்: தங்கம் வென்ற சதீஷ்குமாருக்கு ரூ.50 லட்சம் பரிசு

திங்கட்கிழமை, 28 ஜூலை 2014      விளையாட்டு
Image Unavailable

சென்னை, ஜூலை 29 - ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கத்திற்கு ரூ. 50 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமாருக்கு பாராட்டு தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா எழுதியிருப்பதாவது,
ஸ்காட்லாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் ஒரு புதிய சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கும் இந்திய தேசத்திற்கும் பெருமை தேடி தந்து விட்டீர்கள். இந்த மகத்தான சாதனை புரிந்ததற்காக தமிழக மக்களின் சார்பில் எனது இதயபூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் பங்கேற்ற முதல் சர்வதேச போட்டி இதுதான். அந்த முதல் போட்டியிலேயே தங்க பதக்கம் வென்றது நீங்கள் செய்த மகத்தான சாதனை. காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் பெறும் வீரர்களுக்கு வழங்கப்படும் பரிசு தொகையை ரூ. 50 லட்சமாக உயர்த்தி 2011ம் ஆண்டு டிசம்பரிலேயே நான் அறிவித்து விட்டேன். அந்த பரிசுத் தொகையை பெற தற்போது நீங்கள் தகுதி உள்ளவர். அதன்படி தங்கப்பதக்கம் வென்ற உங்களுக்கு ரூ. 50 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும். உங்களுடைய வெற்றிக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். மீண்டும் ஒருமுறை தமிழக மக்கள் சார்பிலும் இந்த நாட்டு மக்கள் சார்பிலும் எனது வாழ்த்துக்கள். எதிர்காலத்திலும் இதுபோன்ற வெற்றிகள் தொடரட்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்