முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணையில் வினாடிக்கு 6800 கன அடி நீர் திறப்பு

திங்கட்கிழமை, 28 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

மேட்டூர், ஜூலை.29 - கர்நாடக அணைகளிலிருந்து உபரி நீர் திறப்பதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் மட்டம் 78 அடியை எட்டியுள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நீர் மட்டம் நேற்று முன்தினம் 74.70 அடியாக இருந்த நிலையில் ஒரே நாளில் 3.11 அடி உயர்ந்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீர் மட்டம் 77.81 அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்து நேற்று முன் தினத்தை விட 1300 கன அடி அதிகரித்து 40.215 கன அடி வீதம் நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. நீர் இருப்பு 39.80 டி.எம்.சி.யாக உள்ளது.

ஆடி பெருக்கு பண்டிகையன்று மக்கள் காவிரி ஆற்றில் நீராடுவதற்கு வசதியாக வரும் 3-ஆம் தேதி வரை அணையிலிருந்து கூடுதலாக 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அணையிலிருந்து வினாடிக்கு 6800 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. நீர் திறப்பு அதிகரிப்பால் அனல் மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மற்றும் 5 கதவணைகளில் மூலம் சுமார் 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது.

கர்நாடக அணைகளில் நீர் திறப்பால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சினிஃபால்ஸ், பெரியபானி, ஐந்து அருவி, மெயின் அருவி ஆகிய இடங்களில் தண்ணீர் கொட்டுவதால் நேற்று 11-வது நாளாக தடை நீடித்தது. ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. நேற்றுமுன் தினம் 42 ஆயிரத்து 200 கன அடி நீர் வந்த நிலையில் நேற்று காலை 8:30 மணி நேரப்படி 39-ஆயிரம் கன அடியாக குறைந்திருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்