முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுமுறை நாட்களிள் வர வி.ஐ.பி.க்களுக்கு நிபந்தனை

செவ்வாய்க்கிழமை, 29 ஜூலை 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

நகரி, ஜூலை.30 - திருப்பதி கோவில் சமீநாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. விடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக உள்ளது. அதோடு வி.ஐ.பி.க்கள் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் கூட்டத்தை சமாளிக்க திருமலை தேவஸ்தான் திணறிவருகிறது.

இந்நிலையில், திருப்பதி கோவிலில் அடுத்த மாதம் 8-ம் தேதி வரலட்சுமி பூஜை நடக்கிறது. அதற்கு அடுத்த 2 நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாகிறது. இதேபோல் சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அடுத்த 2 நாட்கள் விடுமுறை தினமாகும்.

இந்த நாட்களில் பக்தர்கள் பெருமளவு திருப்பதியில் கூடுவார்கள் என எதிர்பார்கப்படுகிறது. இத்தகைய விடுமுறை நாட்களில் விஐபி பக்தர்கள் திரசனத்துக்கு வரவேண்டாம் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டு உள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி ஸ்ரீவாசராஜூ வெளியிட்டுள்ள அறிகையில், ஆக்ஸ்டு 8,9,10 மற்றும் 15,16,17 ஆகிய விடுமுறை நாட்களில் விஐபிக்கள் தரிசனத்துக்கு வருவதை தவிர்க்கும்படி கேட்டுகொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்