முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகா., தேர்தல்: காங்.-தே.காங்., கூட்டணி மீண்டும் ஏற்படுமா?

புதன்கிழமை, 30 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 31 - மராட்டிய மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக, சிவசேனா கூட்டணி இப்போதே தேர்தல் பணியில் ஈடுபட தொடங்கி விட்டன. இதையடுத்து காங்கிரசும், மராட்டிய மாநில தேர்தலில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் 288 தொகுதிகளில் பாதிக்கு பாதி இடங்களை தேசியவாத காங்கிரஸ் கேட்கிறது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் விரும்பவில்லை. சுமார் 150 இடங்களில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது. சரத்பவார் இதற்கு ஒத்து கொள்ளவில்லை. இதனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்படுமா என்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது. இந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையை தீர்க்க இரு கட்சியினரும் முடிவு செய்தனர். இதற்காக நேற்று காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவை சரத்பவார் சந்தித்து பேசுகிறார். இந்த பேச்சுவார்த்தை முடிவில்தான் இரு கட்சிகளிடையே கூட்டணி உடன்பாடு ஏற்படுமா என்பது தெரியவரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்