முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இமாச்சலப் பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து 21 பேர் பலி

புதன்கிழமை, 30 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

சிம்லா, ஜூலை.31 - இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் பயணிகள் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இமாச்சலப் பிரதேச அரசு போக்குவரத்து கழகத்துக்குச் சொந்தமான பஸ், தலைநகர் சிம்லாவில் இருந்து 30 பேருடன் சவேராகாத் நகருக்கு புறப்பட்டது. சிம்லா மாவட்ட எல்லைக்கு உள்பட்ட பாசந்த்பூர் கிங்கல் மலைப் பாதையில் அந்த பஸ் சென்று கொண்டிருந்தது. காதர் காட் என்ற இடத்தில் குறுகலான கொண்டைஊசி வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக 400 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் பஸ் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் பஸ்ஸில் இருந்த 21 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்