எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ன்னை.ஜூலை.31ஒவ்வொரு மாவட்டத்திலும், வருடத்திற்கு இருமுறை வணிகர்களுக்கான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுவதன் தொடர்ச்சியாக, வணிகர்களுக்கும், வணிகவரித் துறை அலுவலர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு வணிக வரி மாவட்ட துணை ஆணையர் மற்றும் கோட்ட இணை ஆணையர் அலுவலகங்களில், முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி திங்கட்கிழமை தோறும் வணிகர் குறை தீர்க்கும் நாள் கடைபிடிக்கப்படும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்...
சட்டசபையில் நேற்று வ்ணிகவரி ம்ற்றும் பதிவுத்துறை மானியக்கோரிக்கையை அமைச்சர் எம்.சி.சம்பத் தாக்கல் செய்தார்.அப்பொது அவர் அறிவித்தாவது:
முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி , 2013-2014-இல் சென்னை மண்டலத்தில் உள்ள நான்கு வணிகவரி கோட்டங்களின் எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பிற மண்டலங்களில் உள்ள வணிகவரி கோட்டங்களுக்குள்ளாகவே, வணிகவரி மாவட்டங்களுக்கு இடையேயான பணிப்பகிர்மானம் ஒரே சீராக இருக்கும் பொருட்டு, பணியாளர்கள் எண்ணிக்கை மற்றும் வேலைப்பளுவின் அடிப்படையில் மாவட்டங்கள் மற்றும் வணிகவரி சரகங்களின் எல்லை மறுசீரமைக்கப்படும்.
முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, ரூ.250 லட்சம் செலவில், திருச்சியில் வணிகவரிப் பணியாளர் பயிற்சி நிலைய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த 11.6.2014 அன்று முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இப்பயிற்சி நிலையத்திற்கு, கூடுதல் வசதிகளை ஏற்படுத்த ரூ.25.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை தலைமைப் பயிற்சி நிலையம் மற்றும் மண்டலப் பயிற்சி மையங்களில் அலுவலர்களுக்குத் துறைசார்ந்த சட்டப்பிரிவுகள் மற்றும் விதிகள் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் பணியாளர்களிடம் மென்பொருள் பயன்பாட்டுத்திறன் மற்றும் தலைமைப் பண்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் பயிற்சி அளிப்பது அவசியமாகும். இதற்காக, இணை ஆணையர்களுக்கு திருச்சிராப்பள்ளியிலுள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திலும் பிற அலுவலர்களுக்கு துறையின் பயிற்சி நிலையங்களில் பயிற்சி வழங்குவதற்காக தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதர வசதிகள் செய்து தருவதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி , ரூ.154.26 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னையில் நான்கு கோட்டங்களிலும் உள்ள வரிவிதிப்பு வட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டதன் மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட 11 புதிய வரிவிதிப்பு வட்ட அலுவலகங்களுக்கு அறைகலன்கள் கொள்முதல் செய்வதற்கு,முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி , ரூ.35.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
வணிகவரித் துறையின் செயல்பாடுகள் தடையில்லாமல் நடைபெறுவதற்கும் வரி வசூல் சிறப்பாக நடைபெறுவதற்கும், 18 பழைய வாகனங்களுக்குப் பதிலாக ரூ.107 இலட்சம் மதிப்பீட்டில் 18 புதிய வாகனங்களும், சென்னையில் வரிவிதிப்பு வட்டங்களை மறு சீரமைத்ததின் காரணமாக, ஏற்கனவே உள்ள இரண்டு மத்திய செயலாக்கக் குழுக்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இரண்டு செயலாக்கக் குழுக்களுக்கு முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி , ரூ.28 இலட்சம் செலவில், 4 புதிய வாகனங்களும் வாங்கப்படும். அத்துடன் மேற்படி வாகனங்களை இயக்குவதற்கு 4 புதிய ஓட்டுனர் பணியிடங்களும் தோற்றுவிக்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், வருடத்திற்கு இருமுறை வணிகர்களுக்கான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுவதன் தொடர்ச்சியாக, வணிகர்களுக்கும், வணிகவரித் துறை அலுவலர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு வணிக வரி மாவட்ட துணை ஆணையர் மற்றும் கோட்ட இணை ஆணையர் அலுவலகங்களில், முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி திங்கட்கிழமை தோறும் வணிகர் குறை தீர்க்கும் நாள் கடைபிடிக்கப்படும்.
வணிகவரி ஏய்ப்பை கட்டுப்படுத்தி, அரசு வருவாயை அதிகரிக்கும் பொருட்டு, வரி ஏய்ப்பு குறித்த தகவல் அளிப்போருக்கு, பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், முழுவதுமாக வசூலிக்கப்படும் வரித் தொகையில் 10 சதவீதம் அல்லது ரூ.25,000 என்ற உச்சவரம்பானது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணைப்படி, ரூபாய் ஒரு இலட்சமாக உயர்த்தப்படும்.
இப்பரிசளிப்புத் திட்டத்தின் கீழ் அதிகளவிலான வரி ஏய்ப்பினை கண்டறிந்து வருவாய் ஈட்டித்தரும் துறை அலுவலர்களுக்கும் மற்றும் தனி நபர்களுக்கும் சில குறிப்பிட்ட இனங்களில் தகுந்த சன்மானம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கான திருத்திய விதிமுறைகள் தனியாக வெளியிடப்படும்.
1. பொது அதிகார ஆவணங்கள் உரிய முத்திரைத் தீர்வையுடன் உள்ளதா என்பது குறித்து சான்றளிக்கும் அதிகாரத்தை சார்பதிவாளர்களுக்கு வழங்குதல்
ஒரு குறிப்பிட்ட ஆவணம் உரிய முத்திரைத் தீர்வை மதிப்புடன் உள்ளதா என்பதை, 1899-ஆம் ஆண்டு இந்திய முத்திரைச் சட்டப் பிரிவு 31-ன்படி சான்றளிக்கும் அதிகாரம் (ஹனதரனiஉயவiடிn) தற்போது மாவட்டப் பதிவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், அயல் நாடுகளில் எழுதிக் கொடுத்து நமது மாநிலத்தில் பெறப்படும் பொது அதிகார ஆவணங்கள் போதிய முத்திரைத் தாளில் எழுதப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து, சான்று பெறுவதற்காக பொது மக்கள், மாவட்டப் பதிவாளர் அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நடைமுறையை எளிதாக்கும் வண்ணம், பொது அதிகார ஆவணங்களைப் பொறுத்தவரை, அவை உரிய முத்திரைத்தீர்வை மதிப்புடன் உள்ளதா என்பதைக் கண்டறிந்து சான்றளிக்கும் அதிகாரம் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி , அனைத்து சார்பதிவாளர்களுக்கும் வழங்கப்படும்.
1899 ஆம் ஆண்டு இந்திய முத்திரை சட்டப் பிரிவுகள் 52, 53 மற்றும் 54-இன் கீழ், பிழையாக பயன்படுத்தப்பட்ட, கெட்டுப்போன மற்றும் பயனுராத முத்திரைத்தாட்களுக்கான திருப்புத்தொகை வழங்கும் மாவட்ட ஆட்சியரின் அதிகாரம் அனைத்து துணைப் பதிவுத்துறைத் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி துணைப் பதிவுத்துறைத் தலைவர்கள் திருப்புத்தொகை அளிக்கும் போது முத்திரைத் தாட்களின் உண்மைத்தன்மை குறித்து மாவட்டப் பதிவாளர்களிடம் அறிக்கை பெற்றே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே இத்தகைய நேர்வுகளில் விரைவு நடவடிக்கை எடுக்க ஏதுவாகவும் பொது மக்களுக்கு பயன்தரும் வகையிலும், இந்த அதிகாரம் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி , அனைத்து மாவட்டப் பதிவாளர்களுக்கும் வழங்கப்படும்.
அடமானம் உரிமையை விடுவிக்கப்படுவதாக எழுதிக்கொடுக்கப்படும் ஆவணங்கள் இந்திய முத்திரை சட்டம் கூறு 55-ஹ கீழ் வகைப்படுத்தப்படுகிறது. இவ்வகை ஆவணங்களுக்கு சொத்தின் சந்தை மதிப்பு மீது 1ரூ முத்திரை தீர்வை, அதிகபட்சம் ரூ.25,000/- என்ற உச்சவரம்புக்குட்பட்டு வசூலிக்கப்படுகிறது. எனினும் பதிவுக் கட்டணத்திற்கு உச்சவரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதால் சொத்தின் சந்தை மதிப்பு மீது 1ரூ பதிவு கட்டணம் வசூலிக்க வேண்டியுள்ளது. இந்நிலை முத்திரை தீர்வையை விட அதிக பதிவுக்கட்டணம் வசூலிக்கும் நிலையினை ஏற்படுத்துவதால், பதிவு செய்யவரும் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி , பதிவுக் கட்டணத்திற்கு ரூ.4,000/- என உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும்.இவ்வாறு அமைச்சர். பேசினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.