முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.ஸ்டாலின் மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு

புதன்கிழமை, 30 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 31-மு.க.ஸ்டாலின் மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், முதல்–அமைச்சர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கில் கூறியிருப்பதாவது:–

கடந்த 22-ந்தேதி தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் இருந்து வெளியில் வந்த தி.மு.க. பொருளாளரும், எம்.எல்.ஏ.வுமான மு.க. ஸ்டாலின் பத்திரிகையாளருக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், சட்டசபைக்கு நாங்கள் (தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்) வருவதை முதல்-அமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள் ஆகியோருக்கு பிடிக்கவில்லை. சபாநாயகர் சர்வாதிகாரியாக செயல்படுகிறார் என்று கூறியுள்ளார்.

ஸ்டாலின் கூறிய இந்த குற்றச்சாட்டு, உள்நோக்கமானது. முதல்–அமைச்சருக்கு சமுதாயத்தில் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அவர் பேசியுள்ளார். எனவே, அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஆதிநாதன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்