எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை 31: தமிழகத்தில் விளையாட்டை ஊக்கப்படுத்த முதல்வர் ஜெயலலிதா நேற்று முக்கிய சலுகைகளை அறி வித்துள்ளார். .
விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள் சீரமைக்கப்படுவதுடன் இளைஞர்களின் சேவையை கவுர விக்கும் வகையில் சுதந்திர தினத் தன்று விருது வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். மாநிலத்திற்கென ஒரு இளைஞர் கொள்கை உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சட்டசபையில் அவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதாவது:
விளையாட்டு என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமல் லாமல், உடல் நலம், மன நலம் பேணுவதாகவும், வாழ்க்கைக்கு பயிற்சி அளிக்கும் களமாகவும் விளங்குகிறது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த விளையாட்டினை மேம்படுத்தும் வகையில் கடந்த மூன்றாண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள் எனது தலைமையிலான அரசால் தீட்டப்பட்டு, செயல்படுத்தப்படுகின்றன.
மனதிற்கு மகிழ்ச்சி தரும் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
வேலூர் மற்றும் திருப்பூர் தவிர ஏனைய மாவட்ட தலைமையிடங்களில் மாவட்ட விளையாட்டு வளாகங்கள், அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், பெரும்பான்மையான விளையாட்டு வளாகங்கள் 15-20 ஆண்டுகள் பழமையானவை. சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலியில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களில் முக்கிய புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு வளாகத்திற்கும் ஒரு கோடி ரூபாய் வீதம் 4 கோடி ரூபாய்; மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள விளையாட்டு வளாகங்களில் அவ
சர பழுதுகள் சரிபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக 1 கோடி ரூபாய் என மொத்தம் 5 கோடி ரூபாய் ஒரு முறை சிறப்பு மானியமாக ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தற்போது திருச்சிராப்பள்ளி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களில் முக்கிய புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள தலா 80 லட்சம் ரூபாய் மற்றும் பிற மாவட்ட வளாகங்களில் அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள 80 லட்சம் ரூபாய் என மொத்தம் 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது 23 மாவட்டங்களில் 25 நீச்சல் குளங்கள் இயங்கி வருகின்றன. பெரும்பான்மையான நீச்சல் குளங்கள் 15-லிருந்து 20 ஆண்டுகள் வரை பழமையானவை. தண்ணீரை சரி சமமாக பராமரித்தல் மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை பேணுதல் ஆகியவை நீச்சல் குளங்களை பராமரித்தலின் மிக முக்கிய அம்சங்கள் ஆகும். பெரும்பான்மையான இடங்களில் நீரை சுத்தப்படுத்தும் நீர் வடிப்பான்கள் நிறைவான அளவிற்கு செயல்படுவதில்லை. பயன்பாடு மற்றும் தேய்மானம் காரணமாக குளங்களிலுள்ள தரைத் தளம் மற்றும் சுற்றுச் சுவர் உடைந்துள்ளன. எனவே இந்த நீச்சல் குளங்கள் 3 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு செய்து, புதுப்பித்து பராமரிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீச்சல் குளத்திலுள்ள நீருக்கு ஓசோன் சுத்திகரிப்பு செய்யப்பட்டால் நீரின் தரம் அதிகமாக உயர்த்தப்படுவதுடன், அதற்காக ஆகும் செலவுகளையும் காலப் போக்கில் மிச்சப்படுத்தலாம் என்பதன் அடிப்படையில், வேளச்சேரி நீச்சல் குள வளாகம், செனாய் நகர், மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூரில் உள்ள நீச்சல் குளங்களில் நிறுவப்பட்டுள்ள வடிகட்டும் நிலையங்களை மாற்றி தலா 15 லட்சம் ரூபாய் வீதம் 75 லட்சம் ரூபாய் செலவில் ஓசோன் சுத்திகரிப்புடன் கூடிய புதிய வடிகட்டும் நிலையங்கள் அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதலமைச்சர் மாநில இளைஞர் விருது என்ற புதிய விருது உருவாக்கப்படும். 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று இவ்விருது வழங்கப்படும். இந்த முதலமைச்சர் மாநில இளைஞர் விருது, 50,000/- ரூபாய் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.
2005 ஆம் ஆண்டு எனது ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட விளையாட்டு மற்றும் உடற் கல்விக்கான தனிப் பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகில் உள்ள மேலக்கோட்டையூரில் 125 ஏக்கர் பரப்பிலான பரந்த வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில், மாணாக்கர் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களின் பயன்பாட்டிற்காக உலகத் தரம் வாய்ந்த வசதிகளை அளிக்கும் வகையில், 18 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில் நூலக அறை, ஆய்வுக் கூடம், கூட்டரங்கம் மற்றும் பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் ஆகியவை அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மட்டுமல்லாமல், பரந்து விரிந்த இந்தப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள நிர்வாக கட்டடம், விடுதிகள், பணியாளர் குடியிருப்புகள், விளையாட்டு மைதானங்கள் ஆகிய இடங்களுக்கு மாணாக்கரும், பணியாளர்களும் சென்று வர வசதியாக 2 கிலோ மீட்டர் இணைப்புச் சாலை அமைத்துத் தரப்படும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக மாற்றத்திற்கான முக்கிய காரணியாகவும், சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் பின்னணியில் இருப்பவர்களாகவும் விளங்கிக் கொண்டிருக்கின்ற இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இளைஞர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஒருமித்த அணுகுமுறையை வழங்கும் வகையிலும், தேசிய வளர்ச்சியில் அவர்கள் முழுமையாக பங்காற்றும் வகையிலும், மாநிலத்திற்கென ஓர் இளைஞர் கொள்கை வகுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், இளைய சமுதாயத்தினரின் உடல் நலமும், மன நலமும் மேலும் உறுதி செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு