முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானா முதல்வருக்கு நெருக்கடி நீங்கியது

வியாழக்கிழமை, 31 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக.01 - தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த அரியானா மாநில மின் துறை அமைச்சர் அஜய் யாதவ், தனது ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார்.

இதனால் அரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கியுள்ளது. முன்னதாக அஜய் யாதவ், முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும் அரியானா மாநில பொறுப்பாளருமான ஷகீல் அகமது ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷகீல் மகது, ஹூடா அமைச்சரவையில் அஜய் யாதவ் தொடர்வார். அவர் எழுப்பிய பிரச்சனைகள் குறித்து கட்சி மேலிடம் பரிசீலிக்கும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்