முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி நிர்வாகத் துவக்கம்: தேவகவுடா பாராட்டு

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், ஆக 2 - பிரதமர் நரேந்திர மோடி சிறப்பான நிர்வாகத்தை தொடங்கி இருப்பதாக தேவகவுடா பாராட்டு தெரிவித்தார். முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா பெங்களூரில் நிருபர்களிடம் கூறியதாவது,

பிரதமர் மோடி சிறப்பான நிர்வாகத்தை தொடங்கி இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலில் அசைக்க முடியாத பலத்தை பெற்று இருக்கிறார். தற்போது நாடு முழுவதும் ஏராளமான பிரச்சினைகள் சூழ்ந்துள்ளன. அதை தீர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறார். பொருளாதார கொள்கையை பொறுத்தவரையில் மோடிக்கு நெருக்கடி உள்ளது. இப்போதுதான் அவர் நிர்வாகத்தை தொடங்கி இருப்பதால் அவருக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். பிரச்சினைகளை சமாளித்து வந்த பின்புதான் கருத்து கூற முடியும். அதே சமயம் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றம் 1991ம் ஆண்டு முதல் உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதில் இருந்து நாம் தப்பிப்பது கடினம். இவ்வாறு தேவகவுடா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்