முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடன் தள்ளுபடியில் குளறுபடி: ஜெகன் மோகன் ஆவேசம்

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

நகரி, ஆக 2 - ஆந்திராவில் தேர்தல் தோல்வி குறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

குண்டூரில் நடந்த கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது,

பொய்யான வாக்குறுதிகளை சொல்லி சந்திரபாபு நாயுடு ஆட்சியை பிடித்து உள்ளார். தேர்தலின் போது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை சொல்ல நான் விரும்பவில்லை. சந்திரபாபு நாயுடு போல் நானும் சொல்லி இருந்தால் மக்கள் நம்மை ஆட்சியில் அமர்த்தி இருப்பார்கள். வாக்குறுதியை நிறைவேற்ற முடியாவிட்டால் மீண்டும் எப்படி அவர்கள் முகத்தில் விழிக்க முடியும்.

ஆனால் சந்திரபாபு நாயுடு விவசாயிகள், மகளிர் சுய உதவி குழுக்களின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தலின் போது கூறினார். இதனை நம்பி மக்கள் அவருக்கு வாக்களித்தனர். ஆனால் இப்போது கடனை தள்ளுபடி செய்ய இயலாது என்கிறார். அவரை நம்பி கடனை கட்டாத விவசாயிகள் இப்போது அதிக வட்டி சுமை காரணமாக அவதிப்படுகிறார்கள். கடன் தள்ளுபடியில் சந்திரபாபு நாயுடு ஒரு தகவலும் அவரது மந்திரிகள் ஒரு தகவலும் கட்சி நிர்வாகிகள் ஒரு தகவலும் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். கடனை தள்ளுபடி செய்யாததால் மகளிர் குழுக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். ஒரு பொய்யை எத்தனை காலம் சொல்லி ஏமாற்ற முடியும். எனவே விரைவில் மக்கள் சந்திரபாபு நாயுடுவை கல்லால் விரட்டியடிக்கும் காலம் வரும். அவரது பித்தலாட்ட அரசியலுக்கு மக்கள் விடை கொடுப்பார்கள். இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்