எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.5 - தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக இணைய தளத்தில் செய்தி வெளியிட்ட இலங்கை அரசை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை தமிழ் திரையுலகினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.இலங்கை தூதரகத்தை மூடவேண்டும் என்றும் நடிகர் விஜய் உட்பட பல நடிகர்கள் ஆவேசமாக பேசினார்கள்.
இலங்கை அரசின் ராணுவ இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியானது. இதற்கு அனைத்து கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதிமுக வினர் தமிழகம் முழுவதும் இலங்கை அதிபர் ராஜபக்சே கொடும்பாவியை எரித்து, கறுப்புக்கொடி போராட்டங்களையும் நடத்தினர்.
தமிழ் திரையுலகம் சார்பில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இயக்குனர்கள் சங்கத்தலைவர் விக்ரமன் அறிவித்திருந்தார்.
அதன்படி நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம் எதிரில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் நடிகர் நடிகைகள் காலை 10.30 மணிக்கு திரண்டார்கள். இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் தலைமையில் டைரக்டர்களும் வந்தனர். பெப்சி தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் பங்கேற்றனர்.இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட அவர்கள் முயன்றனர். அப்போது போலீசார் தடுத்தனர். லயோலா கல்லூரி எதிரில் போடப்பட்ட பந்தலில் இலங்கைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இந்த போராட்டத்தில் நடிகர்கள் சிவகுமார், விஜய், சூர்யா, சிவா, விக்ரம் பிரபு, ஸ்ரீகாந்த், வினய், ரித்தீஷ், பார்த்திபன், வையாபுரி, குண்டு கல்யாணம், தாமு, பட்டாபி, அனுமோகன், நடிகை குயிலி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், கலைப்புலி தாணு, இப்ராகிம் ராவுத்தர், முக்தா சீனிவாசன், டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சீமான், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், வி.சேகர், கே.எஸ்.ரவிக்குமார், பெப்சி விஜயன், நடன இயக்குநர் சிவசங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் டி.வி. நடிகர் நடிகைகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள். டிஜிட்டல் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் தலைமையில் தயாரிப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷங்கள் அடங்கிய பேனர்கள் வைத்து இருந்தனர். தாயை வணங்குபவன் தமிழன், தாயை பழிப்பவன் சிங்களவன், தாயை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடோம் பத்து கோடி தமிழர்களின் புறநானூற்று தாய் அம்மா. குரங்கு கையில் பூமாலை கோத்தபய கையில் இலங்கை, உலகாண்ட தமிழனை அழிக்க நினைக்காதே. ஆட்டம் போடும் சிங்களனே ஓட்டம் எடு இலங்கைக்கு என்பன போன்ற வாசகங்கள் அதில் இருந்தன.
இலங்கையை கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகர்கள் ஆவேசமாக பேசினார்கள். நடிகர் சங்க தலைவர் சரத்குமார் பேசியதாவது:–
முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழக மீனவர் நலனுக்காக குரல் கொடுக்கிறார். மத்திய அரசுக்கும் கடிதங்கள் எழுதுகிறார். இலங்கை தமிழர்களை கொன்று குவித்த இலங்கையை போர்க் குற்றவாளி நாடக அறிவிக்க வேண்டும் என்றும் அதன் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றி உள்ளார்.
இதற்காக முதல்வரை பற்றி இலங்கை அரசு இணையதளத்தில் அவதூறு வெளியிட்டு இழிவு செயல் செய்துள்ளது. ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமான கச்சத்தீவை மீட்க முதல்வர் முயற்சித்து வருகிறார். அது நடக்கும் இலங்கை தமிழர் மற்றும் மீனவர் பிரச்சினையில் புரட்சித்தலைவி எழுதும் கடிதங்களுக்கு மத்திய அரசு செவிசாய்க்காமல் உள்ளது. முதல்வரை அவமதித்த இலங்கை அரசை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக எச்சரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் விஜய் பேசியதாவது: தமிழக மீனவர்களுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் முதலமைச்சரை இழிவுப்படுத்திய இலங்கை அரசை கண்டிக்கிறேன். சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை இழுத்து பூட்ட வேண்டும். இந்த விமர்சனம் தாயை விமர்சனம் செய்வதற்கு சமமான செயலாகும். இவ்வாறு விஜய் பேசினார்.
ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது: முதலமைச்சரை விமர்சனம் செய்த ராஜபக்சேவின் இந்த நடவடிக்கை கீழ்த்தரமான, கேவலமான செயலாகும். இது ஒட்டுமொத்த தமிழக மக்களையே அசிங்கப்படுத்திய நடவடிக்கை என்றே நான் கருதுகிறேன். இதை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும் என்றார்.
ஆர்.கே.செல்வமணி பேசியதாவது: முதல்வரை அவமதித்த இலங்கை அரசுக்கு தமிழ் திரையுலகம் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்த சாலைக்கு தமிழ்ஈழ சாலை என பெயர் சூட்ட வேண்டும் என தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை வைக்க உள்ளோம் என்றார். ஆர்.கே.செல்வமணி டைரக்டர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, நாடுகளிடையே நல்ல நட்புறவை ஏற்படுத்தவே தூதரகங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் நல்ல உறவை கெடுக்கும் செயலில் ஈடுபடும் இலங்கை தூதரகம் தேவை இல்லை. இதை அகற்ற வேண்டும். இலங்கை தூதரகம் உள்ள சாலைக்கு தமிழீழ சாலை என பெயர் சூட்ட வேண்டும் என்றார்.
நடிகர் சிவகுமார் பேசும் போது, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது அல்ல. நமது மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் தாக்குவதை கண்டித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதுகிறார். இதை கொச்சை படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசும் போது, முதல்–அமைச்சரை இலங்கை அரசு இழிவு படுத்தியதை கண்டிக்கிறோம். இந்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது. இலங்கையில் நடைபெறும் ராணுவ கருத்தரங்கில் நமது ராணுவ அதிகாரிகள் பங்கேற்க கூடாது என்றார்.
டைரக்டர் விக்ரமன் பேசும் போது, எத்தனையோ பெண்கள் தலைவர்களாக இருந்துள்ளனர். தெரசாவை அன்னை தெரசா என்றோம். சோனியாகாந்தி அன்னை சோனியா என்று அழைக்கப்படுகிறார். புரட்சித் தலைவியை அம்மா என்று அழைக்கிறோம். அம்மா என்று அழைக்கப்படும் தலைவியை இலங்கை அரசு கொச்சை படுத்தி உள்ளது. இது ஒட்டு மொத்த தமிழர்களையும் கொச்சைப்படுத்துவது ஆகும். எனவே இலங்கை தூதரகத்தை அகற்ற வேண்டும் என்றார்.
கலைப்புலி தாணு பேசும் போது, தாயை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடமாட்டோம் என்று தமிழ் திரையுலகமே ஒன்று திரண்டு இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது. வருங்காலத்தில் தாயை பழித்ததற்கான தண்டனையை இலங்கை அனுபவிக்கும். அப்போது தமிழர்கள் மட்டும் காப்பாற்றப்படுவார்கள் என்றார்.
டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:–
பல காலமாக தமிழர்களை அழித்து வரும் சிங்கள அரசு அடுத்ததாக தமிழக மீனவர்களை கொடுமைபடுத்தியது. இப்போது அதையும் தாண்டி முதல்–அமைச்சரை கொச்சைப்படுத்தி உள்ளது. இது ஒட்டு மொத்த தமிழர்களையும் கொச்சைப்படுத்தும் செயல். இந்த பிரச்சினையில் புரட்சி தலைவி எடுக்கும் முடிவுக்கு திரையுலகம் எப்போதும் துணை நிற்கும் என்றார். நடிகர் கே.ராஜன் பேசும் போது, கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமல்ல என்ற பா.ஜனதா அரசை எதிர்க்கிறோம் என்றார்.
போராட்டத்தை தொடர்ந்து இலங்கை துணை தூரகத்தை சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். நடிகர், நடிகைகளை காண ஏராளமான பொது மக்களும் அங்கு திரண்டிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.