முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார்கள் மோதல்: டி.ராஜேந்தர் உறவினர் உட்பட 4 பேர் பலி

திங்கட்கிழமை, 11 ஆகஸ்ட் 2014      சினிமா
Image Unavailable

 

மரக்காணம், ஆக 12 - சினிமா டைரக்டர் டி. ராஜேந்தரின் தங்கை சேமலதா. இவருடைய மகன் ஆதிகுரு(22). சினிமா உதவி டைரக்டராக பணியாற்றி வந்தார். 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான மயிலாடுதுளை வந்திருந்தார். நேற்று காலை டாடா இண்டிகா காரில் மயிலாடுதுறையில் இருந்து சென்னை புறப்பட்டார். காரில் அவருடைய உறவினர்கள் பிரியதர்சினி(29), ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விஜயராகவன்(52) ஆகியோர் இருந்தனர். காரை விஜயராகவன் ஓட்டி வந்தார்.

அதிகாலை மூன்றரை மணியளவில் மரக்காணம் அருகே உள்ள செட்டிகுப்பம் என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்த போது சென்னையில் இருந்து புதுவை நோக்கி ஒரு கார் வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் இரு கார்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் இரு கார்களும் அப்பளம் போல் நொறுங்கின. மயிலாடுதுறையில் இருந்து வந்த காரில் இருந்த ஆதிகுரு, பிரியதர்ஷினி, விஜயராகவன் 3 பேருமே அதே இடத்திலேயே நசுங்கி பலியானார்கள். சென்னையில் இருந்து வந்த காரில் புதுவை சாரத்தை சேர்ந்த முருகன் என்பவருடைய மனைவி செந்தமிழ், அவருடைய மகன் சுரேஷ்குமார், டிரைவர் பாக்கியராஜ் ஆகியோர் இருந்தனர். அவர்கள் படுகாயமடைந்தனர். சுரேஷ்குமார் அதே இடத்திலேயே உயிரிழந்தார். செந்தமிழ், பாக்கியராஜ் இருவரும் புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தில் இறந்த புதுவை வாலிபர் சுரேஷ்குமார் பிளஸ் 2 முடித்து விட்டு என்ஜீனியரிங் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பித்திருந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று புதுவை திரும்பிய போது விபத்தில் சிக்கி கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்