முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அட்மிட்

செவ்வாய்க்கிழமை, 12 ஆகஸ்ட் 2014      சினிமா
Image Unavailable

 

திருவனந்தபுரம், ஆக.13 - நடிகர் மோகன்லால் மூட்டு வலி காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அரண், சிறைச்சாலை, ஜில்லா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருப்பவர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால். இவர் கடந்த சில மாதங்களாகவே மூட்டு மற்றும் தசை வலியால் அவதிப்பட்டு வந்தார். தொடர்ச்சியாக ஷூட்டிங் இருந்ததால் சிகிச்சையை தள்ளிப்போட்டு வந்தார். நேற்று முன் தினம் அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் மோகன்லாலுக்கு அறுவை சிகைச்சை செய்ய டாக்டர்கள் ஆலோசித்தனர். பின்னர் மருந்து மூலமே குணப்படுத்த முடிவு செய்தனர். முழுமையான ஓய்வும் எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுரை கூறி உள்ளனர்.

தற்போது மோகன்லால் நடித்து வரும் பெருச்சாழி பட தயாரிப்பாளர் சான்டிரா தாமஸ் கூறும்போது, மருத்துவமனையில் மோகன்லால் சந்தித்தேன். தற்போது கால் வலி குணம் அடைந்து வருவதாக கூறினார். 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் ஷூட்டிங் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்காக பெருச்சாழி படத்தின் ஆடியோ விழாவை நிறுத்தி வைத்திருக்கிறோம். அவர் வந்தபிறகு விழாவை நடத்துவோம், என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்