முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை மனோரமா சொத்துக்களை அபகரிக்கப்பதாக வழக்கு

வியாழக்கிழமை, 14 ஆகஸ்ட் 2014      சினிமா
Image Unavailable

 
சென்னை, ஆக.15 - பழம்பெரும் நடிகை மனோரமா சொத்துக்களை  பேரன் அபகரிக்கப்பதாக, சென்னை நீதிமன்றத்தில் பேத்தி வழக்கு தொடர்ந்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், கிழக்கு வளச்சேரியில் உள்ள அபிராமி என்றவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:_
என்னுடைய பாட்டி மனோரமா பழம்பெரும் சினிமா நடிகை. அவர் தன்னுடைய நடிப்பின் மூலம் வருவாயை சேர்த்தார். அந்த வருவாயில் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திருவாரூர் ஆகிய இடங்களில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்கள் அனைத்தும் பாட்டி உழைப்பாள் வாங்கியது. என்னுடைய தந்தை பூபதி பெயரில் அந்த இடங்கள் உள்ளது. என்னுடைய பாட்டி கடந்த சில ஆண்டுகளாக உடல் பாதிப்படைந்து மருத்துவமனையில் நினைவு இல்லாத நிலையில் சிகிச்சை பெற்றார். அதே சமயத்தில் எனது தந்தை பூபதி குடிபழக்கத்திற்கு ஆளாகி சுய சிந்தனை இல்லாத நிலையில் இருந்தார். இதைப்பயன்படுத்திக்கொண்டு எனது சகோதரர் டாக்டர் ராஜராஜன் சொத்தை அபகரிக்க முயற்சி செய்து, கடந்த ஆண்டு ஏப்ரல்,மே மாதத்திற்குள் அடுத்தடுத்து என் பாட்டியிடத்தில் எழுதி வாங்கிக்கொண்டார். அவர் ஐ.சி.யு. வார்டில் இருக்கும்போதே தி.நகர் பத்திரப் பதிவு அதிகாரியை வீட்டிற்கு அழைத்து வந்து பத்திர பதிவு நடந்தது. டாக்டர் செல்வாவிற்கு பண செல்வாக்கு ஆகியவையை கையில் எடுத்துக்கொண்டு எனது சகோதரர் மோசடி செய்து வருகிறார்.
அவர் பெயரில் மாற்றி சொத்துக்களை விற்க முயற்சி செய்து முன்தொகையும் பெற்றுக்கொண்டார். ஆகையால் எனது பாட்டி மனோரமா சொத்துக்களை விற்பதற்கு தடைவிதித்து இந்த கோர்ட்டி உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதபதி லஷ்மிகாந்தன் அடுத்த வரும் ஆக.24_ம் தேதிக்குள் நடிகை மனோரமா, மகன் பூபதி, பூபதி மனைவி தனலெட்சுமி, டாக்டர் ராஜராஜன், அவருடைய தங்கை மீனாட்சி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்