முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கே.பாலசந்தர் மகன் மரணம்: முதல்வர் இரங்கல்

சனிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக.17 - பிரபல திரைப்பட இயக்குநர் கே பாலச்சந்தரின் மகன் கைலாசம் காலமானார். இயக்குநர் கே பாலச்சந்தரின் மகன் கைலாசம் நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவருக்கு வயது 53.

பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்த பல படங்களில் தயாரிப்பாளராக இருந்துள்ளார். மின் பிம்பங்கள் என்ற நிறுவனத்தை துவங்கி தொலைக்காட்சிகளுக்கு நிகழ்ச்சிகளை தயாரித்து வந்தார். காச நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பிற்பகலில் அவர் மரணமடைந்தார். கைலாசத்துக்கு கீதா என்ற மனைவியும், விலாசினி என்ற மகளும், விஷ்ணு பாலா என்ற மகனும் உள்ளனர். தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி இவரது சகோதரி. கைலாசத்தின் இறுதிச் சடங்குகள் நேற்று நடந்தது.

இயக்குனர் கே.பாலசந்தரின் மகன் மறைவு குறித்து., கே.பாலசந்தர் அவர்களுக்கு நேற்று (16.8.2014 நாளிட்டு) அனுப்பிய இரங்கல் கடிதத்தின் விவரம் பின்வருமாறு:-

’தங்களின் அன்பு மகன் பி.கைலாசம் 15-ந் தேதியன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன்.

இந்தத் துயரச் சம்பவத்தினால் ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ளபோதிலும், இந்தத் துயரத்தை தாங்கிக்கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் அளிக்கவேண்டும் என்றும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கைலாசத்தின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும், எல்லாம்வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். கைலாசத்தை இழந்துவாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்".

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்