முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் ராணுவத்தால் தீவிரவாதி சுட்டுக்கொலை

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், ஆக 20:

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் தங்தார் செக்டார் பகுதியில் இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி தீவிரவாதிகள் நடமாட்டம் காணப்பட்டது.  அவர்கள் காஷ்மீருக்குள் ஊடுருவ திட்டமிட்டு இருப்பதை எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே ரோந்து வந்த இந்திய ராணுவம் கண்டுபிடித்தது. இதையடுத்து அவர்களை எச்சரித்து ராணுவம் துப்பாக்கியில் சுட்டது. உடனே தீவிரவாதிகளும் துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஒரு தீவிரவாதி பலியானான். அவன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த தீவிரவாதி என்றும், இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற போது சுட்டுக் கொல்லப்பட்டான் என்றும் ஸ்ரீநகரில் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். அங்கு மேலும் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா என்று தொடர்ந்து ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்