முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திட்டக்குழுவிற்கு பதிலான புதிய அமைப்பு குறித்து கருத்து கேட்பு

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2014      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.20 - திட்டக்குழுவிற்கு பதிலாக புதிய அமைப்பை தொடங்குவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் வகையில் மத்திய அரசு ஒரு பொது வெளியை உருவாக்கியுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:- திட்டக்குழுவிற்கு மாற்றாக உருவாக்கப்படும் புதிய அமைப்பு எத்தகையதாக இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள். உங்கள் கருத்துகளை அறிய எனது அரசு ஆவலாக இருக்கிறது. இங்கே பகிரப்பட்டுள்ள இணைய லிங்கில் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், http://www.mygov.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாக கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு, இணைய முகவரியையும் தனது ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

டெல்லி செங்கோட்டையில் 68-வது சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, திட்டக் குழுவைக் கலைக்கப்போவதாக அறிவித்தார். 21-ம் நூற்றாண்டின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த புதிய அமைப்பு உருவாக்கப்படும் என அவர் கூறியிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்