முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஜக எம்.பி. வருண் காந்தி தந்தையானார்

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக.20 - பாஜக எம்பியான வருண் காந்தி பெண் குழந்தைக்கு தந்தையானார். அவரது மனைவி யாமினி நேற்றுமுன் தினம் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் மருமகளான மேனகா காந்தி பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ளார். தற்போது அவர் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருக்கிறார். இவரது மகன் வருண் காந்தி கடந்த லோக்சபா தேர்தலில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பாஜகவில் இவர் அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்குவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்திரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் மேனகா காந்தி பேசுகையில், வருணுக்கு உத்திரப்பிரதேச முதல்வராவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளனர் என்று பேசினார். இதனால் உ.பி. பாஜகவில் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் பாஜக புதிய தலைவரான அமித்ஷா கட்சியில் அதிரடி மாற்றங்களை செய்தார். அப்போது வருண் காந்தியிடம் இருந்த பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வருண் காந்தியின் மனைவி யாமினிக்கு நேற்றுமுன்தினம் மதியம் அழகான பெண் குழந்தை பெறந்துள்ளது. இது குறித்து வருண் காந்தி தனது டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். எங்களுக்கு பெண் குழந்தை பெறந்துள்ளது. எங்களது குடும்பத்திற்கு இது புதிய சந்தோஷத்தை கொண்டுவந்துள்ளது. மகளுக்கு அனுஷ்யா என பெயரிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

யாமினியும் வருணும் கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்