எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, ஆக 20 - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பொன்விழா ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியினை வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச்செயலாளர் முனைவர்.சந்தீப் சக்சேனா தலைமையில், மாவட்ட கலெக்டர் இல.சுப்பிரமணியன் முன்னிலையில், வேளாண்மைத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணை வேந்தர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு ஆகியோர் குத்துவிளக்கேற்றி நேற்று துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பொன்விழா ஆண்டு சின்னம் மற்றும் வேளாண் தொழில் முனைவோர்க்கான விதை உற்பத்தி பயிற்சி கையேட்டினை வேளாண்மைத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணை வேந்தர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வெளியிட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு பெற்றுக்கொண்டார். விவசாயிகளுக்கு அமைச்சர்கள் அம்மா விதைகளை வழங்கினர். அதனைத்தொடர்ந்து பொன்விழா ஆண்டு சிறப்பு அஞ்சல் உறை, பொன்விழா ஆண்டு தேசிய மற்றும் உலகளாவிய கருத்தரங்கு தகவல் கையேடுகள் மற்றும் மதுரை வேளாண்மைக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க தகவல் கையேடுகள் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணை வேந்தர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசும் போது கூறியதாவது,
மதிப்புமிக்க, மகத்துவமிக்க, மாட்சியமைமிக்க மதுரை மாநகரிலே, இந்தியாவிலேயே முதன்மை பல்கலைக்கழகமாக திகழும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 1965ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் நாள் துவக்கப்பட்டு இன்றைய தினம் ஐம்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த ஆற்றல்மிக்க கல்லூரியின் பொன்விழா ஆண்டில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். "வருகின்ற வறட்சியையும் வரப்பு கட்டி வரையறை செய்ய முடியாது" அப்படிப்பட்ட இயற்கையின் இசைவினில் இயைந்து வாழக்கூடிய சமுதாயத்திற்காக பாடுபடுகின்ற துறைதான் வேளாண்மைத்துறை. தேசிய மக்கள் தொகையில் 7 சதவீதத்தினரையும், சுமார் 49 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பை சாகுபடி செய்யும் விவசாயிகளையும், குறிப்பாக இதில் 91 சதவிகிதத்தினராக உள்ள சிறு, குறு விவசாயிகளையும் காக்க வேண்டிய முழுப்பொறுப்பும் நம் அனைவரின் கையில் தான் உள்ளது. அதைவிட பெரும் பொறுப்பு, கிடைக்கின்ற நீரை வைத்து வேளாண்மையை பெருக்க வேண்டும் என்கின்ற பெரிய சவால் நம்மை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, 2025ம் ஆண்டு கிடைக்கக்கூடிய நீரின் அளவு 4.74 மில்லியன் எக்டர் மீட்டர் (மி.எ.மீ) ஆகும். ஆனால் நீரின் தேவை 6.20 (மி.எ.மீ) ஆக இருக்குமென்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் 1.46 (மி.எ.மீ) அளவு நீர் அதாவது, 31 சதவிகித அளவிற்கு நீர் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறப்படுகின்றது. எனவே, தான் தமிழக முதலமைச்சர் முல்லை பெரியார் நீர்மட்ட அளவினை உயர்த்தி, வெற்றிக்கனிகளிலிருந்து விதைகள் பறித்து விவசாயிகளுக்கு நிரந்தர வித்தாக விதைத்து உள்ளார். மாணவச்செல்வங்களாகிய நீங்கள், உங்களுடைய மனமும், கண்ணும் ஒருங்கிணைந்து செயல்படும் விதமாக இருக்க வேண்டுமே தவிர, பட்டங்களுக்காகவும், பதவிகளுக்காகவும் இருக்கக்கூடாது.
மாணவர்கள் நூல்களை வாசிப்பது, பாடப்புத்தகங்களை தாண்டி சிந்திப்பது, படைப்பாக்கத்திறன்களுடன் விளங்குவது என உங்களது அறிவுத்திறனை நல்ல முறையிலேயே வளர்த்துக்கொள்ளவும், வாய்ப்பினை நல்ல முறையில் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தான் தமிழக முதல்வர் கல்வி நிலையங்களை சீர்படுத்தினால் தான், மாணவர்கள் சீராக்கம் பெற்று, சமுதாயம் சீர்திருத்தப்படும் என்ற உயரிய நோக்கோடு ரூ.2 கோடி மதிப்பில் தங்கும் விடுதிகள், ரூ.3 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வணிக வளாகம், வேளாண் ஆராய்ச்சியின் மூலம் ரூ.28 கோடி செலவில் 6 இனங்களில் மகத்துவ மையம், ரூ.15 கோடியில் உயிர் மரபியல் ஆய்வுக்கூடம், ரூ.8.56 கோடி செலவில் புதுமையான ஆராய்ச்சி சிறப்பு மையம் என பல்வேறு வாய்ப்புகளையும், வசதிகளையும் வழங்கியுள்ளார். மாணவர்களாகிய உங்கள் உள்ளத்தில் தெளிவு உண்டாகட்டும், ஒவ்வொரு செயலிலும் ஊக்கம் மிளிரட்டும், வளர்ந்த இந்தியாவைச் செதுக்கும் வளமான சக்தி நமதாகட்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.கு.இராமசாமி, மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.தமிழரசன், சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர், சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர்.ஆர்.தாண்டவன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.மா.திருமலை, திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.முத்துராமலிங்கம், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சாமி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வி.கருப்பையா, உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.வி.கதிரவன், மதுரை மாநகராட்சி துணை மேயர் கு.திரவியம், மாவட்ட ஊராட்சித்தலைவர் மு.தர்மராஜா, துணைத்தலைவர் பி.ஜபார், மதுரை கிழக்கு ஒன்றியப் பெருந்தலைவர் பா.பாண்டீஸ்வரி உள்ளிட்ட அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முனைவர்.இரா.இரபிந்திரன் வரவேற்புரையாற்றினார். முடிவில் மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் (பொறுப்பு) முனைவர்.சி.சின்னுசாமி நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.