எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை.ஆக.21 - சரக்குகள் மற்றும் சேவை வரி குறித்த சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் மாநில அரசுகளைக் கலந்தாலோசித்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும் என்று டெல்லி மாநாட்டில் அமைச்சர் சம்பத் பேசியுள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குறித்த மாநில நிதி மற்றும் வணிகவரித்துறை அமைச்சர்களின் அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் கூட்டம், ஜம்மு காஷ்மீர் மாநில நிதியமைச்சர் எ.ஆர்.ரதெர் தலைமையில் புது டில்லி தலைமைச்செயலகத்தில் நேற்று (20-08-2014) நடைபெற்றது .இக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக வணிகவரிகள் மற்றும் பத்திரப்பதிவு முத்திரைத் தாள் சட்டம் அமைச்சர் .எம்.சி.சம்பத் கலந்து கொண்டார் , வணிக வரித்துறை முதன்மை செயலாளர் .பிரபாகர்,.,நிதி துறை முதன்மை செயலாளர் .சண்முகம் ,மற்றும் அரசு முதன்மை செயலாளர் மற்றும் வணிகவரித்துறை ஆணையாளர் .ராஜாராமன்,., .ஆகியோர் கலந்து கொண்டனர்.
சரக்கு மற்றும் சேவை வரிகள் குறித்து டெல்லியில் நடந்த மாநாட்டில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு மாநில அரசின் கருத்துக்களை எடுத்துரைத்தார். அப்போது அவர் பேசியதாவது:_
மத்திய, மாநில அரசுகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் பங்கேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலாவதாக தமிழக முதல்வரின் சார்பாகவும், தமிழக அரசின் சார்பாகவும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மாநாட்டில் 2014 ஜூன் மாதம் தாக்கல் செய்த விதிவிலக்கு குறித்த பரிந்துரைகள் ஐ.ஜி.எஸ்.டி., ஜி.எஸ்.டி. ஆகியவற்றின் இறக்கு மதி குறித்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் மாநில அரசுகளின் கருத்துகளை நாங்கள் எடுத்துரைக்கிறோம்.
1. வரி விதிப்பில் இரட்டை கட்டுப்பாட்டு முறையை நீக்கவேண்டும்.
சரக்குகள் மற்றும் சேவை வரி குறித்த சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் மாநில அரசுகளைக் கலந்தாலோசித்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
இந்த திருத்த மசோதா – ‘‘பெட்ரோலிய பொருட்கள் மீது இரட்டை வரி விதிப்பை ஏற்படுத்த வழிவகுக்கும்’’ என்றும், ‘‘தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு ஏற்புடையதல்ல’’ என்றும், ‘‘திருத்த மசோதாவில் உள்ள ஒரு சில அம்சங்கள் தமிழகம் போன்ற தொழில் உற்பத்தி அதிகமுள்ள மாநிலங்களின் வருவாயைப் பாதிக்கும்’’ என்றும் முதலமைச்சர்ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
‘‘நான் தெரிவித்துள்ள யோசனையை செயல்படுத்த காலம் கடந்துவிடவில்லை’’ என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரட்டை வரி கட்டுப்பாட்டு முறையில் மத்திய அரசு 1.5 கோடிக்கு மட்டும் கட்டுபாடுகளை விதிக்கிறது. ஆனால் அதற்கு பதிலாக 1.5 கோடிக்கு மேலாகவும் ஏற்ககூடியதாக அமையவேண்டும். வாட் வரி விதிப்புக்கு வெளியில் உள்ள வணிகர்களின் விற்பனையில் 25 லட்சம் ரூபாய் வரைமுறைக்கு பதிலாக 10 வரைமுறை விதிக்கவேண்டும்.
இதேபோல காம்போன்ட் வரி விகிதத்தில் 50 லட்சம் ரூபாய் என்பது ஞிடிக்கவேண்டும். இதில் தமிழக அரசுக்கு ஏற்படும் இழப்பீடுகள் சரி செய்யப்படவேண்டும். மேலும், மாநில வாட் வரி விதிப்பில் இருக்கும் விதிவிலக்குகள் விளக்கப்படவேண்டும் என்பதை நாங்கள் மாற்றி அமைத்துக்கொள்கிறோம். இதற்கு மாநில அரசுகள், உள்ளூர் முக்கியதுவத்தையொட்டி சரக்குகளை தேர்ந்தெடுப்பதில் அனுமதி அளிக்கப்படவேண்டும். அதோடு இதற்கான நஷ்ட ஈடுகளை குறைக்கக்கூடாது.
2. இறக்கு மதியில் வரி விகிதம் தற்போதைய வரி விகிதத்தில் இறக்கு மதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரிகளில் உற்பத்தி செய்யும் மாநிலங்களும், பொருட்களை நுகரும் மாநிலங்களையும் சமமாக நடத்தக்கூடாது. தமிழகம் பெரும்பாலான பொருட்களை உற்பத்தி செய்யும் மாநிலமாக உள்ளது. இந்த விஷயத்தில் நிதி மற்றும் பண பரிமாற்ற விஷயங்களில் விதிக்கப்படும் வரிகளில் பொருட்களை ஏற்றுமதி செய்யும் மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டும்.
ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மீது வரி விதிக்கும் நிர்வாகிகள் அதை இறக்கு மதி செய்யும் மாநிலங்களோடு உள்ள சர்சைகளை மாற்றி அமைக்கவேண்டும்.
விநியோக மாதாந்திர வணிக அறிக்கைகளை தாக்கல் செய்யவேண்டும். அதன் மீதான மேலாதிக்க நிலைமைகள் ஞிக்கப்படவேண்டும்.
அடுத்து 1.5 கோடிக்கு மேல் மிகாமல் வணிகம் செய்யும் வணிகர்கள், விநியோகதஸ்கர்களுக்கும் அதற்கு குறைந்து வணிகம் செய்யும் வணிகர்களின் மாதாந்திர அறிக்கை விஷயத்திலும், வேறுபாடுகளை அகற்றவேண்டும்.
இறுதியாக, அரசியல் சட்ட திருத்த மசோதா நகலில், புகையிலை மற்றும் புகையிலை சம்மந்தப்பட்ட உற்பத்தி பொருட்கள் விஷயத்தில் மாநிலங்கள் விதிக்கும் வரிகள் குறித்து சேர்க்கப்படவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு மட்டும் ஆன விதிகள்தான் சேர்க்கப்பட்டுள்ளன.
இறுதியாக இந்த திருத்த மசோதாவில் பெட்ரோல் மற்றும் டீசல், பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட்டு வரி விதிப்பு விஷயத்தில் மாநிலங்களின் அதிகாரவரம்புக்கு அப்பாற்பட்டு உள்ளன. மாநிலங்களுக்கான வரிவிதிப்பு முறைகள் இதில் சேர்கப்படவில்லை. மாநிலங்கள், பெட்ரோலிய விற்பனை விஷயத்தில் கூடுதல் வரி விதிப்பு முறையை செய்ய விதிமுறைகள் வகுக்கப்படவேண்டும்.
அதோடு இந்த விஷயத்தில் ரெட்டை வரிவிதிப்பு முறைய தமிழகம் ஏற்கக்கூடியதாக இல்லை. தமிழகத்திற்கு பெட்ரோலிய பொருட்கள் மீது விதிக்கப்படும் வரி தொகையில் குறிப்பிட்ட அளவு தமிழகத்திற்கு அளிக்கப்படவேண்டும். ஒட்டுமொத்தமாக இந்த திருத்த மசோதா மாநிலங்களுக்கான நஷ்ட ஈடு அளிக்கும் விஷயத்தில் உரிய விதிமுறைகளை வகுக்கவேண்டும். மேலும் மாநிலங்களின் கருத்துக்கள் ஏற்கப்பட்டு உரிய திருத்த முறைகளை ஏற்கப்படவேண்டும் என்று ஏற்கனவே எங்கள் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதை தாங்கள் ஏற்கவேண்டும்.
இவ்வாறு அமைச்சர் சம்பத் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.