முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாஜ்மஹாலை தகர்க்க சதி: டெல்லி போலீஸ்

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக.21 - இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் நினைவுச் சின்னத்தை தகர்க்கவும், விஷம் தடவிய கடிதங்களை பயன்படுத்தி கொலைகளில் ஈடுபடவும் சதித் திட்டம் தீட்டியதாக, நீதிமன்றத்தில் டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான இந்தியன் முஜாஹிதீனின் தெஷின் அக்தார், ஜியா உர் ரெஹ்மான், முகமது வகார் அசார், முகமது மரூஃப், முகமது சகியூப் அன்சாரி, இம்தியாஸ் ஆலம் ஆகிய 6 பேர் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில், போலீஸார் இன்று துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில், மெக்னீசியம் சல்பேட், அசிடோன் போன்ற ரசாயனம் தடவிய கடிதங்களை அனுப்பி சம்பந்தப்பட்டவர்களை எளிதில் கொலை செய்ய முகமது வகார் அசார் திட்டமிட்டிருந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்