முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 டி.எஸ்.பி.க்கள் இட மாற்றம்: டி.ஜி.பி. ராமானுஜம்

வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.22:தமிழகம் முழுவதிலும் 7 டிஎஸ்பிக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்து காவல் துறை இயக்குனர் ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்..

. இது குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

உளவு பிரிவு (ஐகோர்ட்டு) உதவி கமிஷனராக இருந்த பாண்டியன், நுங்கம்பாக்கம் உதவி கமிஷனராக மாற்றப்பட்டார். வடசென்னை மதுவிலக்கு உதவி கமிஷனர் ஆறுமுகம், அசோக் நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன், சென்னை உளவு பிரிவுக்கும், திருவள்ளூர் குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி. சிவலிங்கம், கும்மிடிப்பூண்டிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

விருதுநகர் டி.எஸ்.பி. சுப்பிரமணியன் நீலகிரிக்கும், திருப்பூர் குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி. கவுதமன் தர்மபுரிக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

சென்னை தலைமையக உதவி கமிஷனர் கோபால் பரங்கிமலை போக்குவரத்து பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

தர்மபுரி மதுவிலக்கு டி.எஸ்.பி. திருநீலகண்டன், கூடலூருக்கு இடம் மாற்றம் செய்ய முதலில் உத்தரவிடப்பட்டது. பின்னர் அந்த உத்தரவு மாற்றப்பட்டு தர்மபுரியிலேயே நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்