எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக. 22 - தொலைநோக்குப் பார்வையும், சிந்தனையும் கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களால் தமிழக மக்களின் சுகாதாரம், வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார். போலியோஇல்லாத மாநிலமாக தமிழகம் விளங்கியதை பாராட்டி உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி டாக்டர் நடா மெனாப்டே விருதினை வழங்கினார்
உலக சுகாதார நிறுவனம் சார்பில் போலியோ நோய் தடுப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட தென் இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்கள், மருத்துவர்கள், யூனிசெப் – நோட்டரி மற்றும் தொண்டு நிறுவனத்தினர் கலந்துகொண்டனர்.
தமிழகம் சார்பில் தமிழக முதல்வரின் ஆணைக்கினங்க மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில் செயல்படும் அரசு தொலைநோக்குச் சிந்தனையோடு திட்டங்களைச் செயல்படுத்தியதால் தமிழ்நாட்டில் மக்களின் சுகாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஒருங்கிணைந்த பொது சுகாதாரத் திட்டங்கள் மூலம் மக்களின் தேவையை நிறைவேற்றுவதோடு, தாய்-சேய் நலன் காக்கப்படுகிறது. தமிழகத்தின் திட்டங்களை பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள், உலக வங்கி, உலக சுகாதார நிறுவனப் பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர். தொலைநோக்குப் பார்வையும், சிந்தனையும் கொண்ட முதல்வர் அம்மா செயல்படுத்தும் திட்டங்கள் சிலவற்றை இங்கே எடுத்துக் கூறுவதில் பெருமைப்படுகிறேன். சீமாங்க் என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைப் பராமரிப்பு சேவை மையத்தின் சிறப்பான செயல்பாடுகள் மூலம் பிரசவத்தின்பொழுது இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஒருங்கிணைந்த சுகாதார காப்பீட்டுத் திட்டத்தினால் ஏழை, எளியோருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளுக்கு இத்திட்டத்தின்மூலம் கிடைக்கும் வருவாயில் மருத்துவமனைகளுக்கு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகிறது. இதனால் மருத்துவமனைகளுக்கு சுய சார்பு ஏற்பட்டுள்ளது. மகப்பேறு நிதியுதவி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்கீழ் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ரூ.12,000 நிதியுதவி 3 தவணை களாக வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.720 கோடி இத்திட்டத்திற்கு வழங்கப்பட்டு 7 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கி யுள்ளவர்களுக்கு பேறுகாலத்திற்கு முன்பு, பேறுகாலத்திற்குப் பின்பு, பேறுகாலத்தில் மற்றும் தடுப்பூசி ஆகிய காலகட்டங்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது. தமிழக மக்களாகிய நாங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு சிறந்த ஆற்றல் மிக்க முதலமைச்சரைப் பெற்றுள்ளோம். தமிழ்நாடு தொலைநோக்குப் பார்வை- 2023 கொள்கையை முதலமைச்சர் அம்மாவின் அரசு வளர்ந்த நாடுகளுக்கு இணையாக திட்டங்களை செயல்படுத்திடவும், தமிழகம் இந்தியாவில் சமூகம் மற்றும் சுகாதாரத்தில் முதல் மாநிலமாகத் திகழவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இறப்பு சதவிகிதம் குறைந்தது மாநில நிதிநிலை அறிக்கையில் மொத்த நிதியில் 5 விழுக்காடு ஒதுக்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3 ஆயிரத்து 888.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, இன்று ரூ.7004 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தாய்-சேய் நல மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. 1980ல் பிரசவத்தின்பொழுது இறப்பு விழுக்காடு 1 லட்சத்திற்கு 450 என்பது இப்பொழுது 68 ஆக குறைந்துள்ளது. குழந்தை இறப்பு சவிகிதம் 1000க்கு 93 என்ற நிலை தற்பொழுது 1000க்கு 21 என்ற அளவில் குறைந்துள்ளது. சீமாங்க் மையங்களின் சிறப்பான சேவையே இந்த வெற்றிக்குக் காரணம். தமிழகத்தில் ஆண்டுதோறும் 12 லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கும், 11 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் போடப்படுகிறது. புதன்கிழமைகள் தோறும் குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட இடம் என்ற முறை கையாளப்பட்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது. வெளியூர், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் போலியோ தடுப்பூசி போடப்படுகிறது. 2011 டிசம்பர் முதல் ஐந்து நோய் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு போடப்படுகிறது. யூனிசெப் மற்றும் சுகாதார கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 95 விழுக்காடு தடுப்பூசி போடப்படுகிறது. 2006ம் ஆண்டு தமிழ்நாடு போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்ட மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 1995-–96ம் ஆண்டு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அறிமுகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நோய்க்கெதிராக போராடி வருகிறோம். எந்த குழந்தையும் விடுபடக்கூடாது என்ற இலக்கை தமிழகத்தில் நிர்ணயித்து இத்திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் பணியாற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் தமிழ்நாட்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்திட முழு பங்களிப்பை வழங்கியுள்ளதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏ.எப்.பி. நெட்வொர்க் தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் மற்றும் உதவிகளை வழங்கிட ஆலோசித்து வருவது பாராட்டிற்குரியது. ஆறு மருத்துவ அதிகாரிகள் 5 பகுதிகளில் போலியோவை ஒழிக்க பணியாற்றுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை வழங்கி கட்டுப்படுத்தும் பணியையும் செய்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் இந்த தொழில்நுட்ப உதவியை, வழிகாட்டுதல்களை பாராட்டுகிறேன். தொலைநோக்குப் பார்வையும், சிந்தனையும் கொண்ட முதலமைச்சரின் திட்டங்களால் தமிழக மக்களின் சுகாதாரம், வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. போலியோ நோயற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார். இறுதியில் சிறப்பாக செயல்பட்டு போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்கியதை பாராட்டி உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி டாக்டர் நடா மெனாப்டே விருதினை வழங்கினார். தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் விருதினை பெற்றுக் கொண்டார்...
.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.