முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூர் அரசு காப்பகத்தில் சிறுவனைத் தாக்கியவர் கைது

வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர்,ஆக.22 - பெங்களூர் அரசு காப்பகத்தில், பிரார்த்தனைக்கு முன்பு சாப்பிட்டதற்காக, 13 வயது சிறுவனைக் கடுமையாகத் தாக்கிய பராமரிப்பாளரை போலீஸார் கைது செய்தனர்.

பெங்களூரின் வில்சன் கார்டன் பகுதியில் குழந்தைகளை பராமரிக்கும் அரசு காப்பகம் உள்ளது. அதன் பராமரிப்பாளராக ரமேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், உணவு நேரத்தில் பிரார்த்தனை செய்வதற்கு முன்பாக சாப்பிட்ட காரணத்தால், 13 வயது சிறுவனைக் கடுமையாகத் தாக்கிய பராமரிப்பாளர் ரமேஷை பெங்களூர் போலீஸ் கைது செய்தது.

இது குறித்து போலீஸ் தரப்பு கூறும்போது, "பிரார்த்தனைக்கு முன்பு சாப்பிடத் தொடங்கியதற்காக அந்தச் சிறுவனை ரமேஷ் இரும்புக் குழாயால் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். அத்துடன், காயமடைந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. தகவல் அறிந்ததும் காப்பகம் சென்று சிறுவனை மீட்டோம். படுகாயம் அடைந்தச் சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்