முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். அத்துமீறல்களுக்கு தக்க பதிலடி: ஜேட்லி

வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.22 - பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவமானது அடிக்கடி காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தநிலையில் நேற்று பாதுகாப்பு அமைச்சர் அருண்ஜேட்லி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்

எல்லையில் எப்போதெல்லாம் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறுகிறதோ அப்போதெல்லாம் இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

எல்லையில் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறுவதையும், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடன் பாகிஸ்தான் தூதர் பேச்சுவார்த்தை நடத்தியதையும் கண்டித்து இந்தியா - பாக் செயலர்கள் தரப்பில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது கவனிக்கத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்