முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹக்கானி தளபதிகள் குறித்து தகவல் அளிப்பவருக்கு பரிசு

வெள்ளிக்கிழமை, 22 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஆக. 23 - வாஷிங்டன் ஆப்கானிஸ்தானில் பயங்கர வாத செயல்களில் ஈடுபட்டுவரும் ஹக்கானி இயக்கத்தின் 5 தளபதிகள் குறித்து தகவல் அளிப்பவருக்கு 3 கோடி டாலர் (சுமார் ரூ.180 கோடி) பரிசளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஹக்கானி இயக்கத்தின் முக்கிய தளபதிகளாக அஜீஸ் ஹக்கானி,கலில் அல் ரஹ்மான் ஹக்கானி, யாஹா ஹக்கானி, அப்துல் ஜாகிர் ஆகிய நாள்வர் குறித்தும் தகவல் அளிப்பவர்களுக்கு தலா 50 லட்சம் டாலர்கள் வரை பரிசு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்கத்தின் தலைவர் சிராஜுதின் ஹக்கானி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ஏற்கெனவே நிர்ணையிக்கப்பட்டிருந்த பரிசு தொகை 50 லட்சம் டாலரிலிருந்து 1 கோடி டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீதான தாக்குதல்கள் உள்பட பல்வேறு பயங்கர வாத செயல்களுக்கு ஹக்கானி இயக்கம் பொறுப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்