முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மிக்கல்லை போட்டு வக்கீலை கொன்ற கள்ளக்காதலி

சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஆக 24 - மதுரையில் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் ஆத்திரமடைந்து காதலனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கள்ளக்காதலி போலீசில் சரணடைந்தார்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது கேஜி பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் ராமசந்திரன். இதன் அருகே உள்ள கேகே பட்டியை சேர்ந்தவர் கருணாகரன். மதுரையில் வக்கீலாக பணிபுரிந்து வந்த ராமச்சந்திரன், ஒரு நில பிரச்சினை தொடர்பாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு கருணாகரனை சந்தித்தார். அப்போது தனது மனைவி ஜெயந்தியையும் கருணாகரன் உடன் அழைத்து சென்றார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ராமசந்திரன், கருணாகரனை அவரது வீட்டில் அடிக்கடி சந்திக்க செல்வது வழக்கம். இதில் ஜெயந்திக்கும், ராமசந்திரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் கருணாகரனுக்கு தெரியவரவே மனைவி ஜெயந்தியை கண்டித்துள்ளார். இதையடுத்து கடந்த 2008ம் ஆண்டு கணவன், மனைவி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்தனர். இந்த தம்பதியினருக்கு பிறந்த சஞ்சீவி(10), தனுஷ்(9) ஆகிய 2 குழந்தைகளையும் ஜெயந்தி தனது தாய் வீட்டில் விட்டு விட்டு ராமசந்திரனுடன் சென்று விட்டார். பல்வேறு ஊர்களில் சுற்றித் திரிந்த ஜெயந்தி, ராமசந்திரன் ஆகியோர் கடைசியாக மதுரை சுந்தர்ராஜபுரம் பகுதியி்ல் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். இந்த நிலையில் கடந்த 21ம் தேதி இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய போவதாகவும், தன்னை விட்டு விலகி செல்லுமாறு ஜெயந்தியிடம் ராமசந்திரன் கூறியுள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் 22ம் தேதி அளவுக்கதிகமாக மது அருந்திய நிலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராமசந்திரனின் தலையின் மீது ஜெயந்தி அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொலை செய்தார். அவர் இறந்ததை உறுதிப்படுத்திய பிறகு கடந்த 2 நாட்களுக்கு பின் நேற்று காலை ஜெய்ஹிந்த்புரம் போலீசில் சரணடைந்தார். அங்கு அவர் போலீசாரிடம் நடந்த விவரங்களை தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராமசந்திரனின் உடலை கைப்பற்றினர். மேலும் கொலைக்காக பயன்படுத்தப்பட்ட அம்மிக்கல்லை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வைரம் ஜெயந்தியை கைது செய்து அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் சுந்தர்ராஜபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago