முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விநாயகர் சதுர்த்தி - ஓணத்துக்கு சிறப்பு ரயில்கள்

சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஆக.24 விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகைகளுக்காக முன்னிட்டு சென்னை, நாகர்கோவில், திருச்சி, மங்களூர், திருவனந்தபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது-

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து (சென்னை எழும்பூர், விருத்தாசலம் வழியாக) நாகர்கோவிலுக்கு (ரயில் எண் - 06005) ஆக. 28-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.20 மணிக்குப் புறப்படும். அதேபோல, நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு (ரயில் எண் - 06006) ஆக. 29-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்கு கிளம்பும்.

ஓணம் பண்டிகை சிறப்பு ரயில்கள்: இதேபோல ஓணம் பண்டிகையை முன்னிட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை - எர்ணாகுளம்: எர்ணாகுளத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்கள் (ரயில் எண் - 06346) செப்டம்பர் 4, 11-ஆம் தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

அதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளத்துக்கு (ரயில் எண் - 06345) செப்டம்பர் 5, 12-ஆம் தேதிகளில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 10.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

நாகர்கோவில் - மங்களூர்: நாகர்கோவிலில் இருந்து மங்களூருக்கு சிறப்பு ரயில் (ரயில் எண் - 06306) செப். 7-ஆம் தேதி இரவு 9 மணிக்கு இயக்கப்படும். அதேபோல, மங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு (ரயில் எண் - 06305) செப். 8-ஆம் தேதி மதியம் 2.45 மணிக்கு புறப்படும்.

திருச்சி - மங்களூர்: திருச்சியில் இருந்து மங்களூருக்கு சிறப்பு ரயில் (ரயில் எண் - 06801) செப். 6-ஆம் தேதி இரவு 7 மணிக்கு இயக்கப்படும். அதேபோல, மங்களூரில் இருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில் (ரயில் எண் - 06802) செப். 7-ஆம் தேதி பகல் 12.30 மணிக்கு இயக்கப்படும்.

சென்னை - மங்களூர்: சென்னை சென்ட்ரலில் இருந்து மங்களூருக்கு சிறப்பு ரயில் (ரயில் எண் - 06003) செப். 4, 11-ஆம் தேதிகளில் மாலை 6.30 மணிக்கு இயக்கப்படும். மங்களூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் (ரயில் எண் - 06004) செப். 5, 12-ஆம் தேதிகளில் மதியம் 2.45 மணிக்கு இயக்கப்படும்.

திருவனந்தபுரம் - சென்னை: திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் (ரயில் எண் - 06348) செப். 3-ஆம் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு சனிக்கிழமை தொடங்குகிறது இவ்வாறு தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்