முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தமிழர் பிரச்சினை: அரசியல் தீர்வு காண வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 26 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக. 27 - தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பின் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று

நடைபெற்றது. நீண்ட நாட்களுக்கு பின் நடைபெற்ற இக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், சுப. வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் இயற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியுள்ளதாவது;

இலங்கை தமிழர் பிரச்சினையில் அரசியல் தீர்வு காணவேண்டும், ஐ.நா மன்றத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை உரையாற்ற அனுமதிக்கக்கூடாது, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் மற்றும் இலங்கையில் நடைபெற்ற மனித மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா மன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணைத்தின் உறுப்பினர்களுக்கு இந்திய அரசு விசா வழங்கவேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதே கோரிக்கையை வலியுறுத்தி டெசோ அமைப்பின் சார்பில் வரும் செப்.3-ந் தேதி சென்னையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்