முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவணங்கள் இன்றி பயணம் செய்த வங்கதேசத்தவர் கைது

செவ்வாய்க்கிழமை, 26 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர்,ஆக.27 - எந்தவித ஆவணங்களுமின்றி ரயிலில் பயணம் செய்த வங்க தேசத்தை சேர்ந்த 33 பேரை திருப்பதி ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

கொல்கத்தாவில் இருந்து பெங்களூருக்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த வங்க தேசத்தை சேர்ந்த 33 பயணிகள் மீது சந்தேகம் அடைந்த சக பயணி கள் கொடுத்த தகவலின் பேரில், திருப்பதி அடுத்துள்ள ரேணி குண்டா ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். இதில் தகுந்த ஆவணங்கள் இல்லாத 33 வங்க தேசத்தினர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் பெங்களூர் செல்ல முயன்றதாக விசாரணையில் தெரியவந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்