முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவாஷ் ஷெரூஃப் பதவி விலக மதகுகு 48 மணி நேரம் கெடு!

செவ்வாய்க்கிழமை, 26 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஆக.27 - பாகிஸ்தானில் கடந்த 15 மாதங்களுக்கு முன்பு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். அவர் தேர்தலில் தில்லுமுல்லு செய்ததாகவும், எனவே அவர் பதவி விலகி மறு தேர்தல் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் தெக்ரிக் இ- இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான் கோரிக்கை விடுத்துார்.

அதே கோரிக்கைை பாத் கட்சி தலைவரும் மதகுருவுமான தகிருல் காத்ரியும் வலியுறுத்தியுள்ளார். இவர்கள் இருவரும் சுமார் 1 லட்சம் தொண்டர்களுடன் லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு பேரணியாக வந்துள்ளனர். பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு கடந்த 12 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் பதவி விலக பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மறுத்து விட்டார். இந்த நிலையில், பாத்கட்சி தலைவர் மதகுரு நவாஷ் பதவி விலக 48 மணி நேரம் கெடு விதித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அரசு 48 மணி நேரத்தில் பதவி விலக வேண்டும். சட்டசபை மற்றும் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்தவேண்டும். மாடல் நகரில் பாத் கட்சியை சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர். அவர்களை கொன்றவர்கள் மீது வழக்குப பதிவு செய்ய வேண்டும். அது குறித்து அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும். பிரதமர் நவாஸ் ஷெரீஃப், பஞ்சாப் முதல் மந்திரியும் அவரது சகோதரருமான ஷாபாஷ் ஷெரீஃப் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்றார்.

இதற்கிடையே போராட்டக் காரர்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இம்ரான்கான் மற்றும் காத்ரி ஆதரவாளர்கள் 24 மணி நேரத்துக்குள் பாராளுமன்ற பகுதியை விட்டு வெளியேற வேண்டும். ஏனெனில் அங்குதான் நீதிபதிகள் அதிகாரிகள் குடியிருப்புகள் உள்ளன. நீதிபதிகள், அதிகாரிகள் அங்கு செல்ல தடையாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ரோட்டுகளில் இருந்தும் அவர்கள் வெளியேற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி நசிருல் முல்க் உத்தரவிட்டுள்ளார். ஏனெனில் அந்த வழியாக தான் கோர்ட்டுக்கு செல்ல வேண்டியுள்ளது. என்று கூறியுள்ளார். மேலும், கோர்ட்டு காம்பவுண்டு சுவர்களில் போராட்டக்காரர்கள் துணிகளை காயவைப்பதற்கும் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்