முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கிச் சுடும் வீராங்கனைக்கு கொடுமை: கணவர் கைது

புதன்கிழமை, 27 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.28 - மதம் மாறக் கோரி கொடுமைப்படுத்தியதாக துப்பாக்கிச் சுடும் வீராங்கனை தாரா ஷாதேவ், அளித்த புகாரின் பேரில் அவரது கணவர் ராக்கிபுல் ஹுசைன் ஜார்கண்ட் - டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதம் மாற கட்டாயப்படுத்தி தன்னை கணவர் வீட்டார் கொடுமைப்படுத்துவதாக தாரா புகார் அளித்தார். கணவர் வீட்டிலிருந்து அந்தப் பெண்ணை பத்திரமாக மீட்ட போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராக்கிபுல் ஹுசைன் என்ற ரோஹித் கோலியை நேற்றுமுன்தினம் டெல்லி - ஜார்கண்ட் போலீஸார் இணைந்து கைது செய்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடும் வீராங்கனை தாரா ஷாதேவ். ராஞ்சியில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெற்றபோது ரோஹித் கோலி என்பவர் அவருக்கு அறிமுகமானார். அவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவருக்கும் ராஞ்சியில் உள்ள பிரபல ஓட்டலில் கடந்த ஜூலை 7-ம் தேதி இந்து சம்பிரதாய முறையில் திருமணம் நடைபெற்றது.

ஆனால் அதற்கு அடுத்தநாள் ரோஹித் கோலியின் வீட்டில் முஸ்லிம் மத நடைமுறைப்படி இருவருக்கும் திருமணம் நடத்தப்பட்டது. அப்போதுதான் ரோஹித் கோலி முஸ்லிம் என்பதும் அவரது பெயர் ராக்கிபுல் ஹுசைன் என்பதும் தாராவுக்கு தெரியவந்தது.

தாராவை மதம் மாறும்படி கணவரும் அவரது குடும்பத் தினமும் வற்புறுத்தியுள்ளனர். அவர் மறுக்கவே அவரை பல்வேறு விதங்களில் கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் கட்டுப் பாட்டு அறை செல்போன் எண்ணுக்கு தாரா ரகசியமாக எஸ்.எம்.எஸ். அனுப்பினார். போலீஸார் விரைந்து செயல்பட்டு அந்த பெண்ணை, கணவர் வீட்டில் இருந்து மீட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்