முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வருடன் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சந்திப்பு

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக. 29 –சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சந்தித்து பேசினார்.

மிகச் சிறந்த அரசியல் தலைவரை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என்று முதல்வரை சந்தித்த பின் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.முதல்வர் ஜெயலலிதாவுக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பொன்னாடை அணிவித்து பூங்கொத்து வழங்கினார்.

முதல்வரை சந்தித்து விட்டு வந்த மத்திய சட்டம், நீதி, தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்களை சந்தித்தனர்.

முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவர் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த மதிப்பு உண்டு. டெல்லி வரும்போ தெல்லாம் நான், அவரை சந்திப்பது வழக்கம். இப்போது சென்னையில் அவரை நான் சந்தித்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு.

‘மிகச் சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவரான முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்ததில் மகிழ்ச்சி’ என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்