முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுச் செயலாளராக தேர்வு: முதல்வர் ஜெயலலிதா நன்றி

வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.30 – அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு

முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளுக்கு நன்றி! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் தாரக மந்திரமான """"உழைப்பே உயர்வு தரும்"" என்ற பொன்மொழிக்கேற்ப பணியாற்றி வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் என் மீது மாறாப் பற்றும், மிகுந்த நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டு, கழக சட்ட திட்ட விதிகளுக்கேற்ப என்னை மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்து உள்ளமைக்காக எனது நெஞ்சார்ந்த நன்றியினை என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக

நான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அவாவில், எனது சார்பில் தலைமைக் கழகத்தில்

வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்த கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

""""போற்ற வேண்டியவை உண்மை, உழைப்பு, உயர்வு; பின்பற்ற வேண்டியவை கனிவு, பணிவு, துணிவு; பேணப்பட வேண்டியவை கடமை, கண்ணியம், கட்டுப்பாடு"" என்றார் பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணா அவர்களின் இந்த அமுதமொழிக்கேற்ப, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், வெற்றிக்காகவும், கழக உடன்பிறப்புகளின் முன்னேற்றத்திற்காகவும், நாட்டு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன் என்ற உறுதியை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்வதோடு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றியினை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago