முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மலைக்கோட்டை பிள்ளையாருக்கு மெகா கொழுக்கட்டை

வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருச்சி, ஆக.30 - திருச்சியில் அடையாளமாகவும், தென் கைலாயம் என்று போற்றப்படுவதுமான திருச்சி மலைக்கோட்டையில் தாயுமானவர் சுவாமி, மாணிக்க விநாயகர், உச்சிபிள்ளையார் ஆகிய கோயில்கள் உள்ளது. இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்குபார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ள"ர். மேலும், மலைககோட்டை உச்சியில் பிள்ளையார்கோவில் அமைந்திருப்பது சிறப்பானதாகும். இந்த கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா சிற்பபாக கொண்டாடப்படுகறது. இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கியது. இவ்விழா செப்டம்பர் மாதம் 11ந் தேதி வரை 14 நாட்கள் நடக்கிறது.

நேற்று விநாயர் சதுர்த்தியையொட்டி மாணிக்க விநாயகருக்கும் உச்சிப்பிள்ளையரும் 150 கிலோ எடையுள்ள மெகா கொழுக்கட்டை படையிலிட்டு நெய்வேத்தியம் செய்து பக்தர்களுக்கு நேற்று முழுவதும் பிரசாதமாக வழங்கப்பட்டது. கடந்த 3 நாட்கள"க கோயில் மடப்பள்ளியில் 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டை இரவு பகலாக பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய் எள், நெய், தேங்காய் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டு பெரிய தூளியில் பாத்திரத்திற்குள் இந்த கொழுக்கட்டை வைக்கப்பட்டது. தொடர்ந்து18 மணி நேரம் இந்த கொழுக்கட்டை அவித்தனர்.

நேற்று காலை மேளதாளங்கள் முழங்க இந்த மெகா கொழுக்கட்டை உச்சிபிள்ளையாருக்கு மலைக்கோட்டை படிகட்டுகள் வழியாக தூக்கி சென்றனர். பின்பு உச்சிபிள்ளையாருக்கு கொழுக்கட்டை படையல் இடப்பட்டது. பின்பு உச்சிபிள்ளையாருக்கு அபிஷேகங்கள் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட க்யூ வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 11ந் தேதி வரை பாலகணபதி, நாகபரண கணபதி, லெட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, முசிக கணபதி, ராஜ அலங்காரம், மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, சித்திபுத்தி கணபதி, நடன கணபதி, ஆகிய அலங்காரங்களில் ஒவ்வொரு நாளும் காட்சியளிக்க இருக்கிறார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணைய ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்