முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் மரணத்திற்கு இரங்கல்

சனிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஆக.31 - தென்சென்னை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் மணி மரணத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

தென்சென்னை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அன்புச் சகோதரர் ஆர்.எஸ்.மணி உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

ஆரம்பகால கழக உடபிறப்பு மணி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்தஇரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்