முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிழக்கு உக்ரைன் சண்டையில் 2,600 பேர் பலி: ஐ.நா.

சனிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

கீவ், ஆக.31 - கிழக்கு உக்ரைனின் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடைபெற்று வரும் சண்டையில் 2,600 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இரு தரப்பினரும் சண்டையிடத் தொடங்கியதைத் தொடர்ந்து, சாவு எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்திருப்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில், கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து அரசு ஆதரவு படையிருக்கும், ரஷ்ய ஆதரவுப் படையினருக்கும் இடையிலான சண்டையில் 2,593 பேர் உயிரிழந்தனர். அப்பகுதியில் ஆல்கடத்தல், சித்ரவதை போன்ற மனித உரிமை மீறல்களில் கிளர்ச்சியாளர்கள் ஈடுபடுகின்றனர், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர்கிடையே, நேட்டோ அமைப்பில் உறுப்பினராவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டுப் பிரதமர் ஆர்செனி யாட்சென்யுக் கூறுகையில், உக்ரைனின் அணி சேராக் கொள்கையை மாற்றியமைத்து, நேட்டோ அமைப்பில் இணைவதற்கான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும். அந்த மசோதா நிறைவேறினால், நேட்டோ மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான தடையும் நீங்கும், என்று தெரிவித்தார்.

டொனெட்ஸ்க் நகரின் மேர்கிலுள்ள இலோவாய்ஸ்க் நகருக்கு வெளியே உக்ரைன் வீரர்கள் ஏறத்தாழ ஒரு வார காலமாக சிக்கியுள்ளனர். இந்நிலையில், ரஷ்ய அரசின் இணையதளத்தில் அதிபர் புதின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேவையற்ற உயிர்ச்சேதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, முற்றுகையிடப்பட்டுள்ள உக்ரைன் வீரர்களை மனிதாபிமான அடிப்படையில் கிளர்ச்சியாளர்கள் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதுகுறித்து கிளர்ச்சியாளர் தலைவர் ஒருவர் கூறுகையில், உக்ரைன் வீரர்கள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டால் மட்டுமே அவர்கள் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்