முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் 9 மாவோயிஸ்டுகள் கைது

சனிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

காத்மாண்டு, ஆக.31 - நேபாளத்துக்கான இந்தியத் தூதர் கலந்து கொண்ட நகழ்ச்சிக்கு எதிராக பந்த் நடந்த அழைப்பு விடுத்ததற்காக, நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

நேபாளத்தின் சித்தாவன் பகுதியில் உள்ள கல்லூரியின் புதிய கட்டிடத்தை அந்நாட்டுக்கான இந்திய தூதர் ரஞ்சித் ரே திறந்து வைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்திய அரசு வழங்கிய ரூ.60 லட்சம் நிதி உதவியுடன் அந்தக் கட்டிடம் எழுப்பப்பட்டிருந்தது. இந்தத் திறப்பு நிகழ்ச்சி நேபாள அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற வேண்டும் என்று நேபாள மாவோயிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியனர் கூறி வந்தனர். இந்திய தூதர் கலந்து கொள்வது முடிவானதும் அப்பகுதியில் பந்த் நடத்த அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

ஆனால், இந்த எதிர்ப்பையும் மீறி ரஞ்சித் ரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கல்லூரிக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார். இந்நிலையில், பந்த் நடத்த அழைப்புவிடுத்ததற்கiாக, நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்