எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கியோட்டோ, செப்.01 - ஜப்பானில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று புத்தர் கோவிலில் தரிசனம் செய்தார்.
பிரதமர் மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் ஜப்பான் சென்றார். ஒசாகா அருகேயுள்ள கன்காய் சர்வதேச விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கிருந்து கியோட்டோ அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற அவரை ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே வரவேற்றார். அங்கு நடந்த சந்திப்பின் போது வாரணாசியை கியோட்டோ போன்று நவீன நகரம் ஆக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கிடையில் ஜப்பானில் நேற்று 2வது நாள் சுற்றுப் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டார். கியோட்டோவில் உள்ள மிகப் பழமை வாய்ந்த தோஜி என்ற புத்தர் கோவிலுக்கு சென்றார்.
இது ஜப்பானில் உள்ள புத்தர் கோவில்களில் மிகவும் உயரமானது. 57 மீட்டர் உயரம் கொண்டது. 8 வது நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகவும் பழமையானது. மரத்தினால் கட்டப்பட்ட 5 அடுக்கு மாடிகளாக ஆனது. இந்த கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு நீண்ட நேரம் சுற்றி பார்த்தார். அவரை கோவில் தலைமை புத்தபிட்சு மோரி அழைத்து சென்று கோவிலின் பாரம்பரியம் மற்றும் வரலாறு குறித்து விளக்கினார். அவருடன் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேயும் சென்று இருந்தார். மோடியுடன் சென்ற மற்றொரு பிட்சு ஹசி கூறும் போது பிரதமர் மோடி இக்கோவிலுக்கு வந்ததில் மிக மகிழ்ச்சி அடைகிறோம். அவருக்கு மிக பெரியமனது. இங்கு வந்ததை நாங்கள் பெருமையாக கருதுகிறோம் என்றார்.
இதற்கிடையே தோஜி புத்தர் கோவிலுக்கு வந்த பிரதமர் மோடியை ஏராளமான இந்தியர்கள் கைகளில் இந்திய தேசிய கொடியை அசைத்து வரவேற்றனர். அவர்களை நேரில் சந்தித்த மோடி கைகுலுக்கி வாழ்த்தினார். தோஜி புத்தர் கோவிலை யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. தோஜி புத்தர் கோவிலை தொடர்ந்து கியோட்டோவில் கின்காகுஜியில் உள்ள தங்க சிலை புத்தர் கோவிலுக்கும் மோடி சென்றார். இது கடந்த 1955ம் ஆண்டில் கட்டப்பட்டது.
அங்கு பிரார்த்தனை செய்த அவர் அங்குள்ள குளம் மற்றும் தோட்டத்தை சுற்றிப்பார்த்தார். மேலும் கோவில் வரலாறு குறித்து கேட்டறிந்தார். கோவிலை சுற்றிப் பார்த்த போது அங்கு வெளிநாட்டு பயணிகள் பெருமளவில் வந்திருந்தனர். அவர்கள் மோடியுடன் போட்டோ எடுத்து கொண்டார். கோவிலுக்கு வந்திருந்த ஜப்பான் பெண்கள் ஆர்வமுடன் அவருடன் போட்டோ எடுத்து கொண்டனர். அதன் பின்னர் கியோட்டோவில் உள்ள ஸ்டெம்செல் ஆராய்ச்சி மையத்துக்கு பிரதமர் மோடி சென்று பார்வையிட்டார். இந்தியாவில் அரிவாள் உரு ரத்த அணு என்ற கொடிய நோயினால் மலை வாழ் மக்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரத்தத்தில் சிவப்பணுக்கள் வட்ட வடிவில் இருக்கும். அதன் மத்தியில் துவாரம் இன்றி இருக்கும். ஆனால் இந்த நோய் பாதித்தவர்களுக்கு சிவப்பணுக்கள் பிறை சந்திரன் வடிவில் இருக்கும். வட்டவடிவ செல்களால் ரத்த நாளங்களில் தாராளமாக சென்று வரமுடியும். ஆனால் நோய் பாதித்த சிவப்பணு செல்களால் சென்று வரமுடியாது. இதனால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.
எனவே சிக்கிள் செல் அனீனியா என்றழைக்கப்படும் அரிவாள் உருரத்த அணு நோயை குணப்படுத்தும் ஆராய்ச்சி குறித்து அங்குள்ள நிபுணர்களுடன் மோடி விவாதித்தார். அப்போது இந்த நோயை குணப்படுத்த இந்தியாவுடன் இணைந்து ஒத்துழைக்க தயார் என ஜப்பான் நிபுணர்கள் தெரிவித்தனர். அவர் குஜராத் முதல் மந்திரி ஆக இருந்த போது கியோட்டோ பல்கலைக்கழகம் வந்துள்ளார். அப்போதும் இது குறித்து அவர் விவாதித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.