முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுக மேயர் வேட்பாளர்கள் 3–ந் தேதி மனு தாக்கல்

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 2 – கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் வருகிற 3–ந் தேதி வேட்பு மனுதாக்கல் செய்கின்றனர்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18–ந் தேதி நடைபெறுகிறது. இதில் கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி அரக்கோணம் விருத்தாச்சலம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கொடைக்கானல், குன்னூர், சங்கரன் கோவில் நகராட்சி தலைவர் பதவிகள் உள்பட 1000த்துக்கும் மேற்பட்ட ஊரக, நகர்ப்புற வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகின்றன.

இதில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் கடந்த 29–ந் தேதி வெளியிடப்பட்டது. கோவை மேயர் பதவிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கணபதிராஜ்குமார், திருநெல்வேலி மேயர் பதவிக்கு மாநகர் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் புவனேஸ்வரி, தூத்துக்குடி மேயர் பதவிக்கு, மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் அந்தோணி கிரேஸி நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வருகிற 3–ந் தேதி வேட்பு மனுதாக்கல் செய்கின்றனர்.

இதே போல் நகரமன்ற தலைவர் பதவிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அரக்கோணம் கண்ணதாசன், கடலூர் குமரன், விருத்தாச்சலம் அருளழகன், குன்னூர் சரவணகுமார், புதுக்கோட்டை ராஜசேகரன், கொடைக்கானல் ஸ்ரீதர், ராமநாதபுரம் சந்தானலட்சுமி, சங்கரன்கோவில் ராஜலட்சுமி ஆகிய 8 வேட்பாளர்களும் 3–ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.

மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னை 35–வது வார்டு டேவிட் ஞானசேகரன், 166–வது வார்டு எஸ்.எஸ்.கே. ராஜேந்திரன், ஈரோடு 60–வது வார்டு பாலசுப்பிரமணியம், திருப்பூர் மாநகராட்சி 22–வது வார்டு கலைமகள் கோபால்சாமி, 45–வது வார்டு கண்ணப்பன் திருச்சி 15–வது வார்டு ராஜலட்சுமி, 32–வது வார்டு சங்கர், தஞ்சை 7–வது வார்டு வாசுகி, மதுரை 85–வது வார்டு லதாகுமார், 4–வது வார்டு சண்முகம், திண்டுக்கல் 9–வது வார்டு பாண்டி, தூத்துக்குடி 37–வது வார்டு மாரிமுத்து ஆகியோரும் 3–ந் தேதி தான் மனுதாக்கல் செய்கின்றனர்.

பல்லாவரம் நகரசபை 2–வது வார்டில் ஏ.சி. கணேசன், தாம்பரம் 7–வது வார்டில் நாகூர் கனி, 33–வது வார்டில் கோமளா, மறைமலைநகர் 11–வது வார்டில் கலையரசி, செங்கல்பட்டு 1–வது வார்டில் ஜீவரத்தினம், 6–வது வார்டில் கன்னியப்பன், மதுராந்தகம் 15–வது வார்டில் வடிவேல், ஆவடி 33–வது வார்டில் உமா மகேஸ்வரி உள்பட 53 நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் வேட்பாளர்களும் 3–ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.

வேட்பு மனு தாக்கல் செய்ய 4–ந் தேதி கடைசி நாள் என்பதால் 3–ந் தேதியும் 4–ந் தேதியும் மனுதாக்கல் பரபரப்பாக காணப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago